
பிரதமர் மோடிக்கு பிரேசிலின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு செவ்வாய்க்கிழமை பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ் விருது வழங்கப்பட்டது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், முக்கிய உலகளாவிய தளங்களில் இந்தியா-பிரேசில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் பிரதமர் மோடியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இந்த விருதை வழங்கினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
I’m honoured to have been conferred ‘The Grand Collar of the National Order of the Southern Cross.’ Gratitude to President Lula, the Government and the people of Brazil. This illustrates the strong affection the people of Brazil have for the people of India. May our friendship… pic.twitter.com/MpKS9FgsES
— Narendra Modi (@narendramodi) July 8, 2025
நன்றி
தனது நன்றிகளை தெரிவித்த பிரதமர் மோடி
இது குறித்து எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி தனது நன்றிகளை தெரிவித்தார். "'The Grand Collar of the National Order of the Southern Cross' விருது எனக்கு வழங்கப்பட்டதில் பெருமை அடைகிறேன். ஜனாதிபதி லூலா, அரசாங்கம் மற்றும் பிரேசில் மக்களுக்கு நன்றி. இது இந்திய மக்கள் மீது பிரேசில் மக்கள் கொண்டுள்ள வலுவான பாசத்தை எடுத்துக்காட்டுகிறது. வரும் காலங்களில் நமது நட்பு இன்னும் புதிய வெற்றிகளை அடையட்டும்." என பதிவிட்டார். 2014 மே மாதம் பிரதமர் மோடி பதவியேற்றதிலிருந்து வெளிநாட்டு அரசாங்கத்தால் அவருக்கு வழங்கப்படும் 26வது சர்வதேச விருது இதுவாகும்.