NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக ஸ்ரீநகர் செல்லும் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக ஸ்ரீநகர் செல்லும் பிரதமர் மோடி
    ரூ.6,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை அவர் வெளியிட உள்ளார்

    சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக ஸ்ரீநகர் செல்லும் பிரதமர் மோடி

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 07, 2024
    12:02 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, முதல்முறையாக ஸ்ரீநகருக்கு இன்று பயணமாகிறார் பிரதமர் மோடி.

    அங்கு நடைபெறவுள்ள பேரணியில் உரையாற்றி, ரூ.6,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை அவர் வெளியிட உள்ளார்.

    ஸ்ரீநகரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் 'விக்சித் பாரத் விக்சித் ஜம்மு காஷ்மீர்' நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொள்கிறார்.

    நாடு முழுவதும் உள்ள பலவிதமான யாத்திரை மற்றும் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் 43 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

    பிஜேபி தலைமையிலான மத்திய அரசு ஆகஸ்ட் 5, 2019 அன்று 370வது பிரிவின் விதிகளை ரத்து செய்து, முந்தைய மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

    அதன் பின்னர் மோடி, அங்கே சென்றதே இல்லை.

    பாதுகாப்பு

    ஸ்ரீநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    பிரதமரின் வருகையை ஒட்டி, ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பிரதமரின் பேரணி நடைபெறும் பக்ஷி ஸ்டேடியம் மூவர்ணக் கொடியால் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பை எதிர்க் கட்சிகள் எதிர்பார்க்கும் நிலையில், பிரதமரின் திட்டமிடப்பட்ட பயணம், இந்த விவகாரத்தில் அவர் என்ன சொல்ல போகிறார் என்ற பலத்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

    ஸ்ரீநகரில், பிரதமர் செல்லும் வழியில் உள்ள பல பள்ளிகளை, புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களும் மூட உத்தரவிடப்பட்டது.

    அதே நேரத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த வாரியத் தேர்வுகள் அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    பிரதமர் மோடி

    மறைந்த பீகார் மாநில முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது பீகார்
    'பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்': மாலத்தீவு அதிபருக்கு எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல் மாலத்தீவு
    'பாஜக தலைவர் எல்கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது': பிரதமர் மோடி   பாஜக
    "இந்தியர்கள் சோம்பேறிகள் என்று நேரு நினைத்தார்": எதிர்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி  நாடாளுமன்றம்

    ஜம்மு காஷ்மீர்

    'ஜம்மு காஷ்மீர் எப்போது மீண்டும் மாநிலமாக்கப்படும்': மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி  உச்ச நீதிமன்றம்
    ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் தயார்: உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு தேர்தல்
    காஷ்மீரில் அரசு ஊழியராக பணியாற்றிய தீவிரவாதி கைது கைது
    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: உத்தரவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025