NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தமிழகம் வரும் பிரதமர்; விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தமிழகம் வரும் பிரதமர்; விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம்
    பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளார்

    தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தமிழகம் வரும் பிரதமர்; விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 28, 2024
    04:47 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். முன்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர், தற்போது கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் மூன்று நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் 6 கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.

    அதனைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளன.

    தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது.

    இந்த நிலையில், பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளார்.

    டெல்லியில் இருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார்.

    பிரதமர் மோடி

    கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

    தனிப்படகு மூலம் கடலின் நடுவே இருக்கும் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி, மே 30ஆம் தேதி மாலை தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருந்து, அங்குள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்யவுள்ளார்.

    கன்னியாகுமரிக்கு பிரதமர் வருவதை ஒட்டி, அங்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    பிரதமர் மோடி, ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆன்மீக பயணம் மேற்கொள்வது வழக்கம்.

    அந்த வகையில் இந்தாண்டு தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக விவேகானந்தர் பாறையில் தியானத்தில் ஈடுபட வருகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர்
    பிரதமர் மோடி
    தேர்தல் முடிவு
    தேர்தல்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிரதமர்

    காசா-எகிப்து எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்- நெதன்யாகு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை அமித்ஷா
     ஜனவரி 2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; ₹19,850 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு அழைப்பு ரஜினிகாந்த்

    பிரதமர் மோடி

    பிரதமரின் விமர்சனத்திற்கு பிறகு, தனது 'சக்தி' கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    மோடியின் கோவை ரோடு ஷோவிற்கு கட்டாயப்படுத்தி அழைத்து வரப்பட்ட மாணவர்கள் மோடி
    "இது இந்துக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பு": ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் மோடி மீண்டும் கண்டனம்  இந்தியா
    "திமுக '5ஜி' குடும்ப ஆட்சி": பிரதமர் மோடி பிரச்சார உரை மோடி

    தேர்தல் முடிவு

    இன்று கர்நாடக தேர்தல் வாக்கெடுப்பு: எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும்  இந்தியா
    கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 1 இந்தியா
    கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது இந்தியா
    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு அமைப்பு தேர்தல்

    தேர்தல்

    சென்னையில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது; யாருக்கெல்லாம் இந்த விதி பொருந்தும்? சென்னை
    அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு திருநெல்வேலி
    "நன்றி சென்னை.. இன்றைய நாள் சிறப்பான நாள்": சென்னை ரோடு ஷோ குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு பிரதமர் மோடி
    தமிழகத்தில் தேர்தலன்று திரையரங்கு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025