
ஏப்ரல் 6 அன்று பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
செய்தி முன்னோட்டம்
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்திற்கு வருகை தருகிறார். தனது பயணத்தின் போது, புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலத்தைத் திறந்து வைக்கிறார்.
2.5 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய பாம்பன் பாலம், இந்திய நிலப்பகுதிக்கும் ராமேஸ்வரம் தீவுக்கும் இடையிலான கடல் இணைப்பை ரயில்கள் ஐந்து நிமிடங்களுக்குள் கடக்க அனுமதிக்கும்.
ஒப்பிடுகையில், முந்தைய காலனித்துவ கால ரயில் பாலம் அதே பயணத்திற்கு 25-30 நிமிடங்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்தப் புதிய பாலம் விவரிக்கப்படுகிறது.
535 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தப் புதிய பாம்பன் பாலம், 1914ஆம் ஆண்டு கட்டப்பட்டு, கடுமையான அரிப்பு காரணமாக டிசம்பர் 2022இல் மூடப்பட்ட பழைய பாலத்திற்கு மாற்றாகும்.
முக்கிய அம்சங்கள்
பாம்பன் பாலத்தின் முக்கிய அம்சங்கள்
2.5 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய பாம்பன் பாலம், பயண நேரத்தை பெருமளவில் குறைகிறது.
இந்தப் பாலம் செங்குத்து லிஃப்ட் அமைப்பைக் கொண்டுள்ளது. இதனால் கப்பல்கள் ரயில் இயக்கத்திற்கு இடையூறு விளைவிக்காமல் பயணிக்க முடியும்.
இது உள்ளூர் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும். புதிய தொழில்நுட்பத்துடன், புதிய பாலம் வேகமான மற்றும் கனமான ரயில்களை தாங்கும் சக்தி கொண்டது.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதிய பாலத்தை "இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் ரயில்வே கடல் பாலம்" என்று குறிப்பிட்டார்.
புதிய பாம்பன் பாலம் வேகமான ரயில்கள் மற்றும் அதிகரித்த போக்குவரத்தை இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது பிராந்தியத்திற்கான மேம்பட்ட இணைப்பை உறுதி செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.