NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மக்களவையில் இன்று: குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மக்களவையில் இன்று: குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறும்

    மக்களவையில் இன்று: குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 02, 2024
    07:56 am

    செய்தி முன்னோட்டம்

    மக்களவை கூட்டத்தொடரில் இன்று பிரதமர் மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளிக்கவுள்ளார்.

    முன்னதாக நேற்று (ஜூலை 1) மக்களவையில் தொடங்கிய காரசார விவாதம் இரவு வரை நீடித்தது.

    கிட்டத்தட்ட 16 மணி நேரம் நடைபெற்ற விவாதம் இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விவாதங்களின் இறுதியில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை குடியரசு தலைவர் கூட்டு கூட்டத்தொடரில் உரையாற்றிய பின்னர், எதிர் காட்சிகள் நீட் தேர்வுத் தாள் கசிவு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கூறியதால், அவையில் கூச்சல் ஏற்பட்டு, அவை இரண்டு நாள் ஒத்தி வைக்கப்பட்டது.

    மோடி பதில்

    ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதில் 

    முன்னதாக நேற்றும் நீட்-யுஜி தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியிருந்தன.

    ஆனால், சபாநாயகர் அதை நிராகரித்ததை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    அதனால், இன்று நீட் குறித்த விவாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்பின்னர், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி இன்று தனது பதில் உரையில் பதிலளிப்பார்.

    நேற்று பாஜக சார்பில் முதல் சபாநாயகராக முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், அவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வாக்கெடுப்பு நடத்தினார்.

    விவாதம்

    நேற்று காரசாரமாக நடைபெற்ற விவாதம்

    நேற்று, எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தனது முதல் உரையை மக்களவையில் ஆற்றிய போது "வன்முறை இந்துக்கள்" என்று அழைக்கப்படுபவர்களை குறிவைத்து பேசியதால் சூடான கருத்துப் பரிமாற்றங்களும் சலசலப்புகளும் இருந்தன.

    ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும் உடனடி பதில் பேசியதால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது.

    "பெரிய மனிதர்கள் அனைவரும் அகிம்சை பற்றியும் பயத்தைப் பற்றியும் பேசியிருக்கிறார்கள்... ஆனால், தங்களை தாங்களே இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு, அசத்தியம் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். நீங்கள் எந்த வகையிலும் இந்து அல்ல" என்று ராகுல் காந்தி கூறினார்.

    மேலும், ராகுல் காந்தி, சிவபெருமானின் படத்தை எடுத்து காட்டியதால் மக்களவையில் அமளி ஏற்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மக்களவை
    குடியரசு தலைவர்
    பிரதமர் மோடி
    எதிர்க்கட்சிகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மக்களவை

    வினா தாள் லீக் மற்றும் தேர்வுகளில் மோசடி செய்வதை தடுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது இந்தியா
    '2024 பொது தேர்தலுக்கு முன்பு குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படும்': அமித்ஷா நாடாளுமன்றம்
    பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, சட்டப்பிரிவு 370 நீக்கம்: பாஜகவின் சாதனைகளை அடிக்கோடிட்டு காட்டினார் பிரதமர் மோடி  இந்தியா
    மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியா? போலி செய்திகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எச்சரிக்கை  தேர்தல்

    குடியரசு தலைவர்

    போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம் அமெரிக்கா
    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன் காசா
    கனடாவில் தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைத்த காலிஸ்தானிகள் கனடா

    பிரதமர் மோடி

    இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், மாலத்தீவு அதிபரை பிரமாண்டமாக வரவேற்கத் திட்டமிடும் இந்தியா  இந்தியா
    இன்று நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே  இந்தியா
    பிரதமர் பதவியேற்றவுடன் மத்திய அமைச்சரவையின் 30 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர் இந்தியா
    பதவியேற்பதற்கு முன் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த முக்கிய தலைவர்கள்  இந்தியா

    எதிர்க்கட்சிகள்

    'இந்தியா' கூட்டணி - 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு குறித்த அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' பாட்காஸ்ட் தொடரினால் ஏற்பட்ட சர்ச்சை  தமிழ்நாடு
    இந்தியாவின் பெயர் மாற்றப்படுகிறதா: கொந்தளிக்கும் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள்  இந்தியா
    நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார் சோனியா காந்தி  காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025