LOADING...
மத்திய அரசு அமைச்சகங்களின் அலுவலகங்களுக்காக வாடகை ₹1,500 கோடி செலவா? பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
மத்திய அரசு அமைச்சகங்களின் அலுவலகங்களுக்காக வாடகை ரூ.1,500 கோடி செலவானதாக பிரதமர் பேச்சு

மத்திய அரசு அமைச்சகங்களின் அலுவலகங்களுக்காக வாடகை ₹1,500 கோடி செலவா? பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 06, 2025
08:08 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஆகஸ்ட் 6) டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் உள்ள கர்தவ்ய பவனைத் திறந்து வைத்து, ஒரு முக்கியமான செலவு குறித்த தகவலை வெளியிட்டார். தலைநகர் முழுவதும் சிதறிக்கிடக்கும் அமைச்சக அலுவலகங்களுக்கான வாடகைக்கு மத்திய அரசின் ஆண்டு செலவு ₹1,500 கோடி என்பதை அவர் கூறினார். நிர்வாக சீர்திருத்தத்தில் இது ஒரு முக்கியமான படி என்று கூறிய பிரதமர் மோடி, முன்னர் பல மத்திய அமைச்சகங்கள் பழைய மற்றும் மோசமாக பராமரிக்கப்படும் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன என்றும், பெரும்பாலும் வாடகை இடங்கள் உட்பட டெல்லியின் பல்வேறு இடங்களில் பரவியுள்ளன என்றார்.

உள்துறை

வாடகை கட்டிடத்தில் இயங்கிய உள்துறை அமைச்சகம்

"போதுமான வசதிகள் இல்லாத இடத்தில் இருந்து கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக உள்துறை போன்ற ஒரு அமைச்சகம் செயல்படுவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?" என்று அவர் குறிப்பிட்டார். கர்தவ்ய பவன் மற்றும் பெரிய சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்புத் திட்டம் அனைத்து முக்கிய அமைச்சகங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதையும், ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதையும், வாடகை செலவுகளை வெகுவாகக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். புதிதாகத் திறக்கப்பட்ட கர்தவ்ய பவன்-03, உள்துறை, வெளியுறவு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, எம்எஸ்எம்இ மற்றும் கிராமப்புற மேம்பாடு போன்ற அமைச்சகங்களைக் கொண்டிருக்கும்.