NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான தொழிற்சாலை; ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து கூட்டாக தொடங்கி வைத்தார் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான தொழிற்சாலை; ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து கூட்டாக தொடங்கி வைத்தார் மோடி
    இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான தொழிற்சாலை தொடங்கி வைத்தார் மோடி

    இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான தொழிற்சாலை; ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து கூட்டாக தொடங்கி வைத்தார் மோடி

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 28, 2024
    10:59 am

    செய்தி முன்னோட்டம்

    திங்களன்று (அக்டோபர் 28) டாடா-ஏர்பஸ் விமான ஆலையை திறப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் குஜராத் மாநிலம் வதோதரா சென்றடைந்தனர்.

    அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக, பிரதமர்கள் மோடி மற்றும் சான்செஸ் ஆகியோர் வதோதராவில் மெகா ரோட் ஷோ நடத்தினர்.

    அதன் பின்னர், பிரதமர் மோடி, ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து, டாடா மேம்பட்ட சிஸ்டம்ஸ் லிமிடெட் வளாகத்தில் சி-295 விமானங்களைத் தயாரிப்பதற்கான டாடா விமான வளாகத்தை கூட்டாகத் திறந்துவைத்தனர்.

    ஸ்பெயினின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ராணுவ போக்குவரத்துக்கு இந்திய விமானந்தப்படை 56 சி-295 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை கொடுத்திருந்தது.

    இதில் முதல் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் நிலையில், 40 விமானங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    விமான தயாரிப்பு

    இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான தயாரிப்பு நிறுவனம்

    இந்த 40 விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கு டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் பொறுப்பேற்றுள்ளது.

    இதற்காக, குஜராத் மாநிலம் வதோதராவில் ராணுவ விமானங்களுக்கான தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இது தற்போது இந்தியாவில் ராணுவ விமானங்களுக்கான முதல் தனியார் துறை அலையாக அமைந்துள்ளது.

    இந்த திட்டத்தில் டாடாவைத் தவிர, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் போன்ற முன்னணி பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களும், தனியார் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் பங்களிக்க உள்ளன.

    முன்னதாக அக்டோபர் 2022இல், பிரதமர் மோடி வதோதராவில் இந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    குஜராத்

    குஜராத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள்

    டாடா விமான தொழிற்சாலை திறப்புக்குப் பிறகு, அம்ரேலியில் உள்ள துதாலாவில் பாரத மாதா சரோவரை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

    பொது-தனியார் கூட்டாண்மை (பிபிபி) மாதிரியின் கீழ் குஜராத் அரசு மற்றும் தோலாக்கியா அறக்கட்டளையின் ஒத்துழைப்பு மூலம் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.

    தோலாக்கியா அறக்கட்டளை ஒரு தடுப்பணையை மேம்படுத்தியது. அதை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, பலப்படுத்திய பிறகு, கொள்ளளவு 24.5 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது.

    இந்த முன்னேற்றம் அருகிலுள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைகளில் நீர்மட்டத்தை உயர்த்தியுள்ளது. இது சிறந்த நீர்ப்பாசனத்தை வழங்குவதன் மூலம் உள்ளூர் கிராமங்களுக்கும் விவசாயிகளுக்கும் உதவும்.

    இந்த திட்டம் தவிர மேலும் சில திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    விமானப்படை
    விமானம்
    குஜராத்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    உலகின் மிகச்சிறிய வாக்யூம் கிளீனர்; கின்னஸ் சாதனை படைத்தார் இந்திய மாணவர் நாதமுனி கின்னஸ் சாதனை
    செயற்கை நுண்ணறிவின் தாக்கம்; 60 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது ஃபோன்பே ஆட்குறைப்பு
    சீன எல்லையில் 2020க்கு முந்தைய நிலைக்கு ஒப்புதல்; உறுதி செய்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா-சீனா மோதல்
    வெளியான 28 மாதங்களுக்கு 50,000 கார்கள் விற்கப்பட்ட விர்டுஸ் செடான்; ஃபோக்ஸ்வேகன் இந்தியா சாதனை ஃபோக்ஸ்வேகன்

    விமானப்படை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்
    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு இந்தியா

    விமானம்

    843 கிலோமீட்டர்கள் நீராவியை மட்டுமே உமிழும் புதிய ஹைட்ரஜன் ஏர் டாக்ஸி வாகனம்
    ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிமீக்கு மேல் பறக்கும் மின்சார விமானம், 90 பேர் பயணிக்கலாம் மின்சார வாகனம்
    'அயன்' படப்பாணியில் அரங்கேறிய தங்க கடத்தல் நாடகம்; ₹69 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கடத்தல்
    225 பயணிகளுடன் ரஷ்யாவிற்கு திருப்பி விடப்பட்ட ஏர் இந்தியா விமானம்; தற்போதைய நிலை என்ன? ஏர் இந்தியா

    குஜராத்

    ராணுவ தளங்கள் மற்றும் இரண்டு முக்கிய நகரங்கள் மீது நடத்தப்பட இருந்த IS தாக்குதல் முறியடிப்பு தீவிரவாதம்
    சீனாவில் அதிகரிக்கும் சுவாச நோய்த்தொற்றுகள்: உஷார் நிலையில் இந்திய மாநிலங்கள்  சீனா
    குஜராத் மாநிலம் சூரத் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 7 பேர் உடல்கள் மீட்பு  மருத்துவமனை
    இந்திய நாட்டின் முதல் புல்லட் ரயில் நிலையம் - வைரலாகும் வீடியோ  அகமதாபாத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025