Page Loader
சிங்கப்பூர், புருனே 3 நாள் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி 
நாடு திரும்பினார் பிரதமர் மோடி

சிங்கப்பூர், புருனே 3 நாள் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி 

எழுதியவர் Venkatalakshmi V
Sep 06, 2024
02:32 pm

செய்தி முன்னோட்டம்

சிங்கப்பூர் மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கான 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு டெல்லி வந்தடைந்தார். முன்னதாக சிங்கப்பூரில் அந்நாட்டின் பிரதமரை சந்தித்த பின்னர், வளரும் நாடுகளுக்கு சிங்கப்பூர் ஒரு முன்மாதிரி என்று மோடி கூறினார். மேலும் பிரதமர் லாரன்ஸ் வோங்குடனான தனது பேச்சுவார்த்தையின் போது, இந்தியா தனக்கென "பல சிங்கப்பூர்களை" உருவாக்க விரும்புவதாக கூறினார். பிரதமர் மோடி தனது சிங்கப்பூர் பயணத்தின் வீடியோவை X இல் பகிர்ந்துள்ளார். "எனது சிங்கப்பூர் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தியது மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கிறது. சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அவர்களின் அரவணைப்புக்கு நன்றி." என பதிவிட்டுள்ளார்.

ஒப்பந்தங்கள் 

இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தங்கள்

முன்னதாக சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியும், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர். இரு தலைவர்களும், தங்கள் பிரதிநிதிகளுடன், இருதரப்பு சந்திப்பை நடத்தினர். அவர்களின் பேச்சுவார்த்தையில், இந்தியா-சிங்கப்பூர் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, டிஜிட்டல் தொழில்நுட்பம், குறைக்கடத்திகள், திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இருதரப்பும் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டன. வணிகத் தலைவர்களுடனான வட்டமேசையில், சிங்கப்பூர் நிறுவனங்கள் அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல்) முதலீடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.