NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - FIR வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - FIR வெளியானது
    ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் - முதல் தகவல் அறிக்கை

    ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - FIR வெளியானது

    எழுதியவர் Nivetha P
    Oct 26, 2023
    01:41 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன்பு நேற்று(அக்.,25) பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

    இருசக்கர வாகனத்தில் வந்த நபரால் இந்த குண்டு வீசப்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த நபரை விரட்டி பிடித்து கைது செய்தனர்.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபர் சென்னை தேனாம்பேட்டை பகுதியினை சேர்ந்த வினோத் என்று தகவல்கள் வெளியானது.

    தான் சிறையில் இருந்தப்பொழுது வெளியில் வர அனுமதியளிக்காத காரணத்தினால் இவ்வாறு செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்திருந்தார். கைது செய்யப்பட்டவர் வைத்திருந்த 2 பெட்ரோல் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    விசாரணை 

    பிரதான வாயிலை நோக்கி வீசப்பட்ட 2 பெட்ரோல் வெடிகுண்டுகள்

    இந்நிலையில், தற்போது இந்த சம்பவம் குறித்த முதல் தகவல் அறிக்கையானது (FIR) பதியப்பட்டுள்ளது.

    அதன்படி இதுகுறித்து சென்னை கிண்டி காவல்நிலைய தலைமை காவலரான மோகன் அளித்த புகாரின் பேரில், 5 பிரிவுகளில், பிடிபட்ட வினோத் என்னும் நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனிடையே அந்த புகாரில்,ஆளுநர் மாளிகை நோக்கி, பெட்ரோல் கொண்டு நிரப்பப்பட்ட பாட்டிலானது மாளிகையின் நுழைவு வாயிலான எண்.,1 முன்னர் பலத்த சத்தத்துடன் வெடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் பிரதான வாயிலை நோக்கி, 2 பெட்ரோல் வெடிகுண்டுகள் நெருப்பு பற்றவைத்த நிலையில் எறியப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    அறிக்கை குறித்த தகவல் 

    #JUSTIN

    ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியானது;

    கிண்டி காவல் நிலைய தலைமைக்காவலர் மோகன் அளித்த புகாரின் பேரில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு;

    முதல் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் நுழைவு வாயில் எண்.1 முன் பலத்த சத்தத்துடன்…

    — News7 Tamil (@news7tamil) October 26, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை
    ஆளுநர் மாளிகை

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    சென்னை

    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை தமிழ்நாடு
    இனி தமிழக நியாயவிலை கடைகளில் பணமில்லா பணப்பரிவர்த்தனை - தமிழக அரசு இந்தியா
    5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு வருகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மு.க ஸ்டாலின்
    சென்னை மெட்ரோ 2ம் கட்ட வழித்தடம் - டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மெட்ரோ

    காவல்துறை

    'ஆண்டி' என்று அழைத்ததற்காக ஏடிஎம் காவலாளியை செருப்பால் அடித்த பெங்களூரு பெண் இந்தியா
    இந்தியா முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதியாகளுடன் தொடர்புடைய 51 இடங்களில் சோதனை என்ஐஏ
    ஈராக் நாட்டில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக பலி திருமணங்கள்
    சென்னை தி.நகரில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்  சென்னை

    காவல்துறை

    உஜ்ஜைன் பாலியல் பலாத்கார சம்பவம்- பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவ முன்வந்த காவலர்கள் மத்திய பிரதேசம்
    சென்னை பெட்ரோல் பங்க் விபத்தின் எதிரொலி - பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்  பெட்ரோல்
    பக்கத்துவீட்டு மட்டன் கறியினை சாப்பிட்ட நாய் சுட்டுக் கொலை - க்ரைம் ஸ்டோரி   க்ரைம் ஸ்டோரி
    மிகவும் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் பிடிபட்டார்  டெல்லி

    ஆளுநர் மாளிகை

    ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் தமிழ்நாடு
    தமிழ் மொழி மீது இந்தி மொழியினை திணிக்க முடியாது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025