NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த மக்கள் சென்னை வந்தடைந்தனர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த மக்கள் சென்னை வந்தடைந்தனர் 
    ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த மக்கள் சென்னை வந்தடைந்தனர்

    ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த மக்கள் சென்னை வந்தடைந்தனர் 

    எழுதியவர் Nivetha P
    Dec 20, 2023
    03:19 pm

    செய்தி முன்னோட்டம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17ம்.,தேதி பெய்த கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள தாதன்குளம் என்னும் பகுதியில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனை கண்டறிந்த கேட்கீப்பர் இதுகுறித்த தகவலை ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்,

    அதன்படி அன்று இரவு திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில் பைலட்டிற்கு இதுகுறித்து தகவலளிக்கப்பட்டுள்ளது.

    அதனால் பாதுகாப்பு கருதி அந்த ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

    இதனிடையே கனமழை தொடர்ந்து பெய்த காரணத்தினால் ரயிலில் பயணித்த 800 பயணிகளுள் 300 பேர் மட்டும் முன்னதாக அங்கிருந்து மீட்கப்பட்டு அருகில் இருந்த பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள பயணிகளை மீட்பதற்குள் வெள்ளம் ரயில் நிலையம் முழுவதும் சூழ்ந்ததோடு, சாலைகள் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    மழை 

    சிறப்பு ரயில்கள் மூலம் சென்னை வந்தடைந்தனர் 

    இதனால் மீதமுள்ள 500 பயணிகள் கடந்த 2 நாட்களாக ரயில் நிலையத்திலேயே சிக்கி கடும் சிரமத்திற்கு ஆளாகின.

    நேற்று தான் இவர்களுக்கு மீட்புக்குழுவினரால் ஹெலிகாப்டர் மூலம் உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்க முடிந்தது.

    வெள்ளம் சூழ்ந்த காரணத்தினால் படகுகள் கொண்டும் மீட்புப்படையினரால் அப்பகுதிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

    இந்நிலையில், மழை ஓய்ந்த நிலையில் சற்று வெள்ளநீர் வடிந்ததையடுத்து நேற்று(டிச.,19)இரவு தேசிய பேரிடர் மீட்பு படையினரால் உள்ளே சிக்கித்தவித்த மக்கள் மீட்கப்பட்டனர் என்று செய்திகள் வெளியானது.

    மீட்கப்பட்ட பயணிகள் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    அதன்பின்னர், அவர்களை வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

    அதனையடுத்து சிறப்பு ரயில்கள் மூலம் பயணிகள் அனைவரும் இன்று(டிச.,20)மதியம் 1 மணியளவில் சென்னை வந்தடைந்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    மீட்கப்பட்ட பயணிகளின் மகிழ்ச்சி தருணம் 

    #BREAKING எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி - ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மீட்கப்பட்ட ரயில் பயணிகள் மகிழ்ச்சி பேட்டி #tnrain #srivaigundam #train #railways #news18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/dW2SBLEwhg

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) December 20, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்செந்தூர்
    ரயில்கள்
    கனமழை
    வெள்ளம்

    சமீபத்திய

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    திருச்செந்தூர்

    திருச்செந்தூர் அருகே பரிதாபம் - திடீர் வெடிச்சத்தம் கேட்டு 10 வயது பள்ளி மாணவன் பலி பள்ளிகளுக்கு விடுமுறை
    திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா மாவட்ட செய்திகள்
    நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசல் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டிஸ் சென்னை உயர் நீதிமன்றம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு கடற்கரை

    ரயில்கள்

    பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி ரத்து  திருச்சி
    ரயிலின் பொது பெட்டிகளில் பயணிப்போருக்கு ரூ.23க்கு உணவு - ரயில்வேத்துறை முடிவு  பயணம்
    சென்னை-பெங்களூர் இடையே புல்லட் ரயில் சேவை துவங்க திட்டம் மத்திய அரசு
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை மும்பை

    கனமழை

    மிக்ஜாம் புயல்: அடுத்த 5 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    ஆந்திராவில் கரையை கடக்க இருக்கிறது மிஜாம் புயல்  ஆந்திரா
    இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை: இன்று என்னென்ன சேவைகள் இயங்கும்? சென்னை
    சென்னை: மீண்டும் இயங்க தொடங்கியது விமானங்கள்; மின் விநியோகம் திரும்பிய பகுதிகளின் விவரங்கள்  சென்னை

    வெள்ளம்

    கன்னியாகுமரியில் கனமழை காரணமாக வெள்ளம் - பாதுகாப்பான இடத்திற்கு மக்கள் மாற்றம்  கனமழை
    வைகை அணை நீர்மட்டம் உயர்வால் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தேனி
    கனமழையால் வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு: கடும் போக்குவரத்து பாதிப்பு பெங்களூர்
    மேட்டுப்பாளையம்-உதகை சாலைகளில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு  பருவமழை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025