NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சீறி வரும் காளைகள், தீரமான வீரர்கள்: பிரபல பாலமேடு ஜல்லிக்கட்டு உற்சாகமாக தொடக்கம் 
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீறி வரும் காளைகள், தீரமான வீரர்கள்: பிரபல பாலமேடு ஜல்லிக்கட்டு உற்சாகமாக தொடக்கம் 
    பாலமேடு ஜல்லிக்கட்டு உற்சாகமாக தொடக்கம்

    சீறி வரும் காளைகள், தீரமான வீரர்கள்: பிரபல பாலமேடு ஜல்லிக்கட்டு உற்சாகமாக தொடக்கம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 15, 2025
    08:47 am

    செய்தி முன்னோட்டம்

    இன்று தமிழ்நாட்டில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    இந்த நாளில் விவசாயிகளின் நண்பனாக இருக்கும் மாட்டிற்கு வர்ணம் பூசி, அழகு படுத்தி, அவற்றிற்கு நன்றி தெரிவித்து வழிபடு செய்வார்கள்.

    இந்த நாளின் முக்கிய நிகழ்வாக ஏறு தழுவுதலும் நடைபெறும். அதன்படி மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நேற்று, பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி மிகுந்த பரபரப்புடன் நடைபெற்றது.

    அதன் தொடர்ச்சியாக, இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது.

    இப்போட்டியினை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!#SunNews | #PalameduJallikattu2025 | #Pongal2025 pic.twitter.com/gf7zFRfYBG

    — Sun News (@sunnewstamil) January 15, 2025

    விவரங்கள்

    போட்டி தொடங்கும் முன்னர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது

    முன்பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் வீரர்களுக்கு ஆய்வு செய்ய 120 பேர் கொண்ட மருத்துவக் குழு பரிசோதனை நடத்தி, காளையின் உடல்நிலை, பதிவு எண், கொம்பின் அளவு போன்ற அம்சங்களை சோதித்து உறுதி செய்தது.

    அதன் பிறகு, உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டு, மகாலிங்கசாமி மடத்துகாளை கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

    பிறகு, அனைத்து காளைகளும் வாடிவாசலில் இருந்து வரிசையாக விடுவிக்கப்பட்டது. சீறிவந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி தங்களின் தீரத்தை வெளிப்படுத்தினர்.

    இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 1200 காளைகள் களம் காணவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவற்றை அடக்க 900 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பரிசு விவரங்கள்

    டிராக்டர் முதல் தங்க நாணயம் வரை பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

    இன்றைய ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசு வழங்கப்பட உள்ளது.

    முதல் பரிசு பெறும் மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் சொகுசு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    இது தவிர, இரண்டாம் பரிசாக காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப்பசு மற்றும் மாடுபிடி வீரருக்கு பைக்கும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    மேலும், அண்டா, சைக்கிள், தங்க நாணயம், டிவி, பிரிட்ஜ் போன்ற பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #WATCH | பாலமேட்டில் தொடங்கியது ஜல்லிக்கட்டு திருவிழா - முதலில் 7 கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன..#SunNews | #PalameduJallikattu2025 | #Pongal2025 | #Jallikattu2025 pic.twitter.com/f2c9LTbN0c

    — Sun News (@sunnewstamil) January 15, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜல்லிக்கட்டு
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    விவசாயிகள்

    சமீபத்திய

    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்
    பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு; பாகிஸ்தானும் பதிலுக்கு நீட்டித்தது இந்தியா

    ஜல்லிக்கட்டு

    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு மாவட்ட செய்திகள்
    ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்  உச்ச நீதிமன்றம்

    தமிழ்நாடு

    அண்ணா பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரிக்க தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் தமிழகம் வருகை அண்ணா பல்கலைக்கழகம்
    2025 பொங்கல் பரிசுத் தொகுப்பில் ₹1,000 இல்லாதது ஏன்? தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் பொங்கல் பரிசு
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000; தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு செய்தி

    சென்னை பரங்கிமலை ரயில் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு; முழு தண்டனை விபரங்கள் மரண தண்டனை
    தமிழகத்தில் அதிகரிக்கும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல்; அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளை தெரிந்து கொள்ளுங்கள் தமிழகம்
    தேசிய வாள்வீச்சு போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார் தமிழக வீராங்கனை பவானி தேவி வாள்வீச்சு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    விவசாயிகள்

    கர்நாடகத்தை கண்டித்து டெல்டா விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு போராட்டம்
    காவிரி விவகாரம் - தமிழக பாஜக சார்பில் அக்.,16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் பாஜக
    100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன? தமிழ்நாடு
    மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 7,563 கன அடியாக உயர்வு மழை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025