NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலில் மூன்று பொதுமக்களுக்கு காயம்

    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 09, 2025
    10:57 pm

    செய்தி முன்னோட்டம்

    வெள்ளிக்கிழமை (மே 9) இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களை அனுப்பியதால் மீண்டும் பதற்றம் அதிகரித்தது.

    இதற்கு இந்திய பாதுகாப்புப் படையினர் உடனடி மற்றும் உறுதியான பதிலடியைக் கொடுத்தனர்.

    கடுமையான மோதலில், பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ட்ரோன்களில் ஒன்று வெடிபொருளை வீசியது.

    இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர். இந்த வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

    அவர்களில் ஒரு பெண் உட்பட, பலத்த காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    மருத்துவ சிகிச்சை

    உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர மருத்துவ சிகிச்சை

    மருத்துவ சேவையை மேற்பார்வையிடும் டாக்டர் கமல் பாகி, ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான தீக்காயங்களுக்கு ஆளானதாகவும், மற்ற இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு ஒப்பீட்டளவில் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறினார்.

    ஃபெரோஸ்பூரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் பூபிந்தர் சிங் சித்து கூறுகையில், "மூன்று பேர் காயமடைந்து தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல்கள் வந்தன.

    மருத்துவர்கள் தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். பெரும்பாலான ட்ரோன்கள் ராணுவத்தால் வீழ்த்தப்பட்டன." என்றார்.

    பாகிஸ்தான் அப்பாவி பொதுமக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து ட்ரோன்களை அனுப்புவதற்கு, இந்திய பாதுகாப்புப் படைகள் உரிய பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பஞ்சாப்
    பாகிஸ்தான் ராணுவம்
    இந்திய ராணுவம்

    சமீபத்திய

    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா
    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்

    பஞ்சாப்

    இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தீபாவளி
    அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,000 இந்தியர்கள் கைது அமெரிக்கா
    'ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்': உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    'அரசியல் பழிவாங்கலுக்கு இது நேரமில்லை': டெல்லி காற்று மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து  உச்ச நீதிமன்றம்

    பாகிஸ்தான் ராணுவம்

    முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான்
    ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான்
    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? ஈரான்

    இந்திய ராணுவம்

    பஹல்காம் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவிற்கு $131 மில்லியன் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அமெரிக்கா
    ராணுவம் மற்றும் விமானப்படைக்கான ALH துருவ் ஹெலிகாப்டரை மீண்டும் இயக்க மத்திய அரசு அனுமதி விமானப்படை
    எல்லை கோடு அருகே பாகிஸ்தான் தொடர்ந்து 8வது நாளாக போர்நிறுத்த மீறல்; இந்திய ராணுவம் பதிலடி பாகிஸ்தான்
    மீண்டும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்தியா கடும் பதிலடி ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025