NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நேற்றிரவு, இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து 500 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் எனத்தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நேற்றிரவு, இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து 500 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் எனத்தகவல்
    24 நகரங்களை குறிவைத்து 500 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள்

    நேற்றிரவு, இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து 500 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் எனத்தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 09, 2025
    05:24 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்றிரவு 8.00 மணி முதல் 11.30 மணி வரை, இந்தியாவின் பல நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஒரே நேரத்தில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் சுமார் 500 சிறிய ட்ரோன்களை அனுப்பியதாக நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது.

    இவற்றில் பெரும்பாலானவை ஆயுதம் ஏந்தாத ட்ரோன்களே.

    L70, ZU-23, ஷில்கா மற்றும் ஆகாஷ் உள்ளிட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவமும், விமானப்படையும் வெற்றிகரமாக முறியடித்தன.

    ஆயுதம் ஏந்தாத ட்ரோன்களை அனுப்புவதற்குப் பின்னால் உள்ள நோக்கம், பொதுமக்களிடையே பீதியை பரப்புவதும், இராணுவ நிறுவல்கள் குறித்து உளவுத்துறை தகவல்களைச் சேகரிப்பதும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    பதில்

    ஆபரேஷன் சிந்தூருக்கு பாகிஸ்தானின் பதில் தாக்குதல்

    ஆபரேஷன் சிந்தூர் மூலம், மே 7 ஆம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா குறிவைத்ததை அடுத்து இஸ்லாமாபாத்தில் பதற்றம் அதிகரித்தது.

    இந்த ராணுவ நடவடிக்கை பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டது என்றும் பாகிஸ்தான் இராணுவ இலக்குகளைத் தவிர்த்தது என்றும் இந்தியா வலியுறுத்தியது.

    இருப்பினும், மே 8 ஆம் தேதி ஜம்மு மற்றும் பதான்கோட்டில் உள்ள இராணுவ தளங்கள் உட்பட இந்தியாவில் பல இடங்களை குறிவைக்க முயன்றதன் மூலம் பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது.

    வான் பாதுகாப்பு அமைப்பு 

    தாக்குதல்களை இடைமறித்து தவிடுபொடியாக்கிய இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பு

    இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வான்வழித் தாக்குதலை இடைமறித்து அதை நடுநிலையாக்கியது.

    முக்கிய நிறுவலுக்கும் சேதம் அல்லது உயிரிழப்புகளையும் தடுத்தது என இந்தியா ராணுவம் கூறியது.

    ட்ரோன்களின் கூட்டத்தைத் தவிர, பாகிஸ்தான் ஏவுகணைகளையும் நிலைநிறுத்தியது, அவை இந்தியாவின் வான் பாதுகாப்புப் பிரிவுகளால் உடனடியாக இடைமறிக்கப்பட்டுத் தடுக்கப்பட்டன.

    "பாகிஸ்தானில் இருந்து எட்டு ஏவுகணைகள் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா மற்றும் ஆர்னியாவை நோக்கி செலுத்தப்பட்டன. அனைத்தும் வான் பாதுகாப்புப் பிரிவுகளால் இடைமறிக்கப்பட்டு தடுக்கப்பட்டன. ஜம்மு மீதான காட்சிகள் இஸ்ரேல் மீதான ஹமாஸ் பாணி தாக்குதலை நினைவூட்டின, பல மலிவான ராக்கெட்டுகள் போல," என்று ஒரு ராணுவ அதிகாரி செய்தி நிறுவனமான பிடிஐயிடம் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இந்திய ராணுவம்
    விமானம்
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  சென்னை
    டெஸ்லாவின் இந்தியா பிரிவு தலைவர் பிரசாந்த் மேனன் திடீர் ராஜினாமா; காரணம் என்ன? டெஸ்லா
    இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது மத்திய அரசு
    நேற்றிரவு, இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து 500 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் எனத்தகவல் இந்தியா

    இந்தியா

    இந்த ஆண்டு ஜப்பானை விஞ்சி நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: IMF பொருளாதாரம்
    இந்தியாவும், இங்கிலாந்தும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டன; இந்தியாவிற்கு என்ன பயன்? வர்த்தகம்
    'ஆபரேஷன் சிந்தூர்': பஹல்கம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் மீது ஏவுகணைத் தாக்குதல் இந்திய ராணுவம்
    Op Sindhoor: இந்திய ராணுவம் தாக்கிய 9 பயங்கரவாத இலக்குகள் எவை? எப்படி? இந்திய ராணுவம்

    இந்திய ராணுவம்

    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள பல இடங்களில் பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கிச் சூடு பாகிஸ்தான்
    இந்தியா ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிறது; அச்சத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பாகிஸ்தான்
    36 மணி நேரத்திற்குள் இந்தியா பதிலடி கொடுக்கும் என்று அச்சம் தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர் பாகிஸ்தான்
    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அடியில் பாகிஸ்தான் சுரங்கப்பாதைகள் தோண்டியதா? ராணுவம் விசாரணை பாகிஸ்தான்

    விமானம்

    மே டே அறிவித்த விமானி; தென் கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளானதற்கு என்ன காரணம்? தென் கொரியா
    விமான விபத்துக்களின்போது பின்பக்கம் அமருவது அதிக பாதுகாப்பைக் கொடுக்குமா? ஆய்வில் வெளியான தகவல் விபத்து
    ஜெஜு ஏர் கருப்பு பெட்டியில் இருந்து தரவுகளை மீட்ட தென் கொரியா புலனாய்வாளர்கள் தென் கொரியா
    செலவுகளை மிச்சப்படுத்த கல்லூரிக்கு விமானத்தில் சென்று வரும் மாணவர்; எந்த நாட்டில் தெரியுமா? கனடா

    பாகிஸ்தான்

    LoC-இல் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் 10 இந்திய பிரஜைகள் கொல்லப்பட்டனர் துப்பாக்கி சூடு
    ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளுக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா அறிவுறுத்தல் ஆபரேஷன் சிந்தூர்
    ‛ஆபரேஷன் சிந்தூர்'-ல் முன்னின்று நடத்திய சிங்கப் பெண்கள் இவர்கள்தான்! ராணுவ, விமானப்படையில் பெண் வீராங்கனைகளின் அதிரடி பங்கேற்பு ஆபரேஷன் சிந்தூர்
    Op sindoor எதிரொலி: பின்வாங்கும் பாகிஸ்தான், பம்மிய அமைச்சர் கவாஜா ஆசிப் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025