NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத வெறியை தூண்டும் செயல்: RSS தலைவருக்கு கண்டனம்
    இந்தியா

    மத வெறியை தூண்டும் செயல்: RSS தலைவருக்கு கண்டனம்

    மத வெறியை தூண்டும் செயல்: RSS தலைவருக்கு கண்டனம்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 12, 2023, 02:30 pm 1 நிமிட வாசிப்பு
    மத வெறியை தூண்டும் செயல்: RSS தலைவருக்கு கண்டனம்
    இந்திய குடிமக்களுக்கு கட்டுப்பாடு விதிக்க அவர் யார்: ஒவைசி ட்விட்டரில் கேள்வி

    RSS தலைவர் மோகன் பகவத்தின் கருத்துக்கள் மதவெறியை தூண்டுவது போல் இருப்பதாக ஹைதரபாத் எம்பி ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். RSS இதழுக்காக அதன் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. "பல காலமாக அந்நிய சக்தியை எதிர்த்து நாம் போர் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், இப்போதைய போர் நமக்குள் நடந்து கொண்டிருக்கிறது. நம் இந்து தர்மத்தை காப்பதற்காக நடந்து கொண்டிருக்கிறது. அதனால், இந்துக்கள் ஆக்ரோஷமாக இருப்பது இயற்கை. இஸ்லாமியர்கள் எங்களை கண்டு பயம் கொள்ள தேவையில்லை. ஆனால், அவர்கள் தனியுரிமை கேட்பதைக் கைவிட வேண்டும். இந்துஸ்தான் எப்போதும் இந்துஸ்தானாக இருக்க வேண்டும்." என்று அந்த பேட்டியில் RSS தலைவர் கூறி இருந்தார்.

    அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

    இந்த பேட்டி தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. "இந்திய சட்டத்திற்கு எதிராக மோகன் பகவத் பேசியுள்ளார். அவரது பேச்சு மத வெறியை தூண்டுவது போல் இருக்கிறது. சிறுபான்மையினருக்கு நேரடியாக அவர் மிரட்டல் விடுத்திருக்கிறார்." என்று CPIM இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. "அவரது பேச்சு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி இருக்கிறது. அவரது பேச்சின் மூலம் RSSஇன் பிரித்து ஆளும் கொள்கை வெளிப்பட்டிருக்கிறது. இதை நாம் ஒன்றாக சேர்ந்து எதிர்க்க வேண்டும்." என்று CPI மாநில செயலாளர் டி.ராஜா கூறி இருக்கிறார். "இஸ்லாமியர்களுக்கு அனுமதி கொடுக்க அவர் யார்? இந்திய குடிமக்களுக்கு கட்டுப்பாடு விதிக்க அவர் யார்? யாருக்கும் பணிந்து போக வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" என்று எம்பி ஒவைசி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நேர்ந்த 2 தற்கொலைகள் - சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சுற்றுலா என்றால் வெளிநாடுகளுக்கு செல்வது மட்டுமல்ல - சித்தார்த் கண்டோத் சென்னை
    ஒரு இரவு தூக்கம் இல்லாமல் இருந்தால், உங்கள் மூளை இரண்டு வருடங்கள் வயதாகிவிடும்; அதிர்ச்சி தகவல் தூக்கம்
    2023ல், பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி, பின்னர் பல மாற்றங்களை சந்தித்த திரைப்படங்கள் தமிழ் திரைப்படங்கள்

    இந்தியா

    மகள்களுக்கு சொத்துரிமை இல்லாததால் மீண்டும் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய தம்பதியர் கேரளா
    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் ராஜஸ்தான்
    ஐஐடி தலித் மாணவர் தற்கொலை: நியாயம் கோரும் மாணவர்கள் மும்பை
    10 லட்சம் ரிட்டன் தரும் எல்.ஐ.சி. சூப்பரான பாலிசி திட்டம்! சேமிப்பு திட்டங்கள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023