NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத வெறியை தூண்டும் செயல்: RSS தலைவருக்கு கண்டனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத வெறியை தூண்டும் செயல்: RSS தலைவருக்கு கண்டனம்
    இந்திய குடிமக்களுக்கு கட்டுப்பாடு விதிக்க அவர் யார்: ஒவைசி ட்விட்டரில் கேள்வி

    மத வெறியை தூண்டும் செயல்: RSS தலைவருக்கு கண்டனம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 12, 2023
    02:30 pm

    செய்தி முன்னோட்டம்

    RSS தலைவர் மோகன் பகவத்தின் கருத்துக்கள் மதவெறியை தூண்டுவது போல் இருப்பதாக ஹைதரபாத் எம்பி ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    RSS இதழுக்காக அதன் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

    "பல காலமாக அந்நிய சக்தியை எதிர்த்து நாம் போர் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், இப்போதைய போர் நமக்குள் நடந்து கொண்டிருக்கிறது. நம் இந்து தர்மத்தை காப்பதற்காக நடந்து கொண்டிருக்கிறது.

    அதனால், இந்துக்கள் ஆக்ரோஷமாக இருப்பது இயற்கை. இஸ்லாமியர்கள் எங்களை கண்டு பயம் கொள்ள தேவையில்லை. ஆனால், அவர்கள் தனியுரிமை கேட்பதைக் கைவிட வேண்டும். இந்துஸ்தான் எப்போதும் இந்துஸ்தானாக இருக்க வேண்டும்." என்று அந்த பேட்டியில் RSS தலைவர் கூறி இருந்தார்.

    ஒவைசி

    அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

    இந்த பேட்டி தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    "இந்திய சட்டத்திற்கு எதிராக மோகன் பகவத் பேசியுள்ளார். அவரது பேச்சு மத வெறியை தூண்டுவது போல் இருக்கிறது. சிறுபான்மையினருக்கு நேரடியாக அவர் மிரட்டல் விடுத்திருக்கிறார்." என்று CPIM இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

    "அவரது பேச்சு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி இருக்கிறது. அவரது பேச்சின் மூலம் RSSஇன் பிரித்து ஆளும் கொள்கை வெளிப்பட்டிருக்கிறது. இதை நாம் ஒன்றாக சேர்ந்து எதிர்க்க வேண்டும்." என்று CPI மாநில செயலாளர் டி.ராஜா கூறி இருக்கிறார்.

    "இஸ்லாமியர்களுக்கு அனுமதி கொடுக்க அவர் யார்? இந்திய குடிமக்களுக்கு கட்டுப்பாடு விதிக்க அவர் யார்? யாருக்கும் பணிந்து போக வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" என்று எம்பி ஒவைசி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    ஹல்த்வானியின் 4,000 குடும்பங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி! இந்தியா
    இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி வங்கிக் கணக்கு
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் காவல்துறை
    கொரோனாவால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா? கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025