NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளைக் கலந்த சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு
    அடுத்த செய்திக் கட்டுரை
    குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளைக் கலந்த சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு
    "இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்": முதலவர் ஸ்டாலின்

    குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளைக் கலந்த சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 12, 2023
    11:40 am

    செய்தி முன்னோட்டம்

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற பகுதியில், சில வாரங்களுக்கு முன், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது.

    இதனால், அந்த பகுதி குழந்தைகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதனையடுத்து, எழுந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை ஆட்சியர் இதை நேரில் சென்று விசாரித்தார்.

    அப்போது, அந்த பகுதி மக்கள் இன்னும் தீண்டாமை செயல்களை பின்பற்றுவது தெரியவந்தது.

    இதை ஒழிப்பதற்கு தேவையான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குடிநீரில் மனித கழிவுகளைக் கலந்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

    இதற்கான கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

    முதல்வர்

    முதல்வர் உரையின் சுருக்கம்

    புதுக்கோட்டையில் நடந்த சம்பவம் கண்டிக்கப்பதக்கது. அது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது.

    சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில் தற்போது அந்த கிராமத்திற்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    நீரின் மாதிரி பரிசோதிக்கப்பட்டு சுத்தமாக பாதுகாக்கப்படுகிறது.

    தற்போது, அந்த கிராமத்தில் உள்ள 32 வீடுகளுக்கும் 2 லட்சம் செலவில் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    7 லட்சம் செலவில் புதிய குடிநீர் தொட்டியும் அமைக்கப்படவுள்ளது.

    குற்றவாளிகளை கண்டறிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    உண்மையான குற்றவாளிகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சம உரிமை மற்றும் மனிதநேயம் கொண்ட மனிதர்களாக நாம் வாழ வேண்டும். இது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்யும் குற்றவாளிகளின் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ஸ்டாலின்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? தமிழக அரசு
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    தொழில்முனைவில் முன்னணியில் இருக்கும் தமிழக பெண்கள்! இந்தியா
    ரூ.25.14 கோடி செலவில் 'நீலகிரி வரையாடு திட்டம்' - தமிழக அரசாணை பிறப்பிப்பு தமிழக அரசு

    ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    பொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா? தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு? தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025