NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளைக் கலந்த சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு
    இந்தியா

    குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளைக் கலந்த சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு

    குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளைக் கலந்த சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு
    எழுதியவர் Sindhuja SM
    Jan 12, 2023, 11:40 am 0 நிமிட வாசிப்பு
    குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளைக் கலந்த சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு
    "இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்": முதலவர் ஸ்டாலின்

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற பகுதியில், சில வாரங்களுக்கு முன், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த பகுதி குழந்தைகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, எழுந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை ஆட்சியர் இதை நேரில் சென்று விசாரித்தார். அப்போது, அந்த பகுதி மக்கள் இன்னும் தீண்டாமை செயல்களை பின்பற்றுவது தெரியவந்தது. இதை ஒழிப்பதற்கு தேவையான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குடிநீரில் மனித கழிவுகளைக் கலந்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கான கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

    முதல்வர் உரையின் சுருக்கம்

    புதுக்கோட்டையில் நடந்த சம்பவம் கண்டிக்கப்பதக்கது. அது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது. சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில் தற்போது அந்த கிராமத்திற்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நீரின் மாதிரி பரிசோதிக்கப்பட்டு சுத்தமாக பாதுகாக்கப்படுகிறது. தற்போது, அந்த கிராமத்தில் உள்ள 32 வீடுகளுக்கும் 2 லட்சம் செலவில் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 7 லட்சம் செலவில் புதிய குடிநீர் தொட்டியும் அமைக்கப்படவுள்ளது. குற்றவாளிகளை கண்டறிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. உண்மையான குற்றவாளிகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சம உரிமை மற்றும் மனிதநேயம் கொண்ட மனிதர்களாக நாம் வாழ வேண்டும். இது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்யும் குற்றவாளிகளின் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    ஸ்டாலின்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    உலக தண்ணீர் தினம் : வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கினார் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை : ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை இறுதி செய்தது பிசிசிஐ ஒருநாள் உலகக்கோப்பை
    இந்திய பாஸ்போர்ட் மட்டும் போதும், இந்த நாடுகளுக்கு விசா இல்லாமலே பயணிக்கலாம்! சுற்றுலா
    டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு டெல்லி

    ஸ்டாலின்

    ஆஸ்கார் விருது வென்ற , 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' குறும்பட இயக்குனரை நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் ஸ்டாலின் ஆஸ்கார் விருது
    தமிழக பட்ஜெட் 2023: விவேகமான நிதி நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்நாடு
    ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஓபிஎஸ் கட்சி தாவுவதற்கு வாய்ப்பிருக்கிறதா தமிழ்நாடு
    'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' பட நாயகர்களை நேரில் சந்தித்து கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்

    தமிழ்நாடு

    விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் விழுப்புரம்
    தமிழக வேளாண் பட்ஜெட்'டினை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பட்ஜெட் 2023
    வானிலை அறிக்கை: மார்ச் 21- மார்ச் 25 புதுச்சேரி
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் கொள்ளையடித்த கில்லாடி பெண்; போலீஸார் கைது வைரல் செய்தி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023