NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "கூர்மையான ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுங்கள்": மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி
    இந்தியா

    "கூர்மையான ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுங்கள்": மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி

    "கூர்மையான ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுங்கள்": மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி
    எழுதியவர் Sindhuja SM
    Dec 27, 2022, 11:16 pm 1 நிமிட வாசிப்பு
    "கூர்மையான ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுங்கள்": மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி
    பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர்(படம்: OneIndia Tamil)

    "வீட்டில் கூர்மையான ஆயுதங்களை வைத்துக்கொள்ளுங்கள்" என்று இந்துக்களுக்கு அறிவுரை கூறி எம்பி பிரக்யா சிங் தாகூர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நேற்று கர்நாடகாவில் நடந்த இந்து ஜாக்ரனா வேதிகே வருடாந்திர கூட்டத்தில் பேசிய இவர், "இந்த உலகில் அடக்குமுறை செய்பவர்களையும் பாவிகளையும் வெளியேற்றும் வரை அன்பின் உண்மையான அர்த்தம் நிலைத்து நிற்காது. எனவே, 'லவ் ஜிகாத்'தில் ஈடுபடுபவர்களையும் பாவிகளாகவே நாம் கருத வேண்டும். அவர்களிடம் இருந்து உங்கள் மகள்களைக் காத்துக்கொள்ளுங்கள். அவர்கள் எல்லாவற்றிலும் 'ஜிகாத்' செய்கிறார்கள். அன்பிலும் கூட! அதனால், உங்கள் வீட்டில் கூர்மையான கத்திகளை வைத்திருங்கள். நமக்கு தற்காத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது. யாராவது அத்துமீறி நம் வீட்டிற்குள் நுழைந்தால் நாம் யார் என்பதை அவர்களுக்கு காட்ட வேண்டும்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    பல்வேறு தரப்பினர் கண்டனம்!

    இவர் கூறிய இந்த கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு, கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரியங் கார்கே, "ஒரு MP இப்படி ஒரு கருத்தை கூறி இருப்பது நல்லதற்கு இல்லை. நாங்கள் இதற்கு அவர் மீது புகார் அளிக்கவுள்ளோம்" என்று கூறி இருகிறார். அவர் மீது தேசவிரோத குற்றம் போடவேண்டும் என்று ம.பி காங்கிரஸ் கோரியுள்ளது. இது குறித்து ட்வீட் செய்த ஜம்மு-காஷ்மீர் பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, "முஸ்லீம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஒரு பாஜக எம்பி வெளிப்படையாக கூறி இருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. ஆனால், அவர் கூறி இருக்கும் இந்த கருத்தை இந்திய அரசு கண்டுகொள்ள மறுக்கிறது." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    பாஜக

    சமீபத்திய

    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் கடலூர்
    ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்
    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு

    இந்தியா

    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு கொரோனா
    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்
    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் நாடாளுமன்றம்

    பாஜக

    எம்பி பங்களாவை காலி செய்ய இருக்கும் ராகுல் காந்தி: வெளியேற்ற நோட்டீசுக்கு பதில் காங்கிரஸ்
    இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம் கர்நாடகா
    புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண் புதுச்சேரி
    மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023