NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு 
    பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு

    பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு 

    எழுதியவர் Nivetha P
    May 15, 2023
    03:50 pm

    செய்தி முன்னோட்டம்

    திமுக'வின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு கடலுக்குள் 134 அடி உயரத்திற்கு பேனா நினைவுச்சின்னம் ஒன்றினை ரூ.81 கோடி செலவில் அமைக்க திமுக அரசு திட்டம் வகுத்து வருகிறது.

    ஏற்கனவே கருணாநிதிக்கு அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் பின்பகுதியில் பெரிய கேட் ஒன்று அமைத்து கண்ணாடி பாலம் நிறுவி அதன் மீது மக்கள் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தினை பார்வையிடும் வகையில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த பிரமாண்ட நினைவுச்சின்னத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட நிலையில்,

    இதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்தது. பலதரப்பட்ட வழக்குகள் இது சம்பந்தமாக போடப்பட்டுள்ளது.

    மெரினா 

    நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சங்கம் மனுதாக்கல் 

    இந்நிலையில் மெரினாவில் இந்த நினைவு சின்னத்தினை அமைக்க மத்திய அரசு 15 நிபந்தனைகளுடன் மாநில அரசுக்கு கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதனையடுத்து தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையே இந்த பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

    மேலும் அவர் உச்ச நீதி மன்றத்தில் இது குறித்து மனு தாக்கலும் செய்துள்ளார்.

    ஏற்கனவே மீனவர்கள் சங்கம் சார்பில் இந்த பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜெயகுமாரும் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    அதிமுக
    திமுக
    கருணாநிதி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    மத்திய அரசு

    இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்வு: 2018ஐ விட 200 புலிகள் அதிகரிப்பு இந்தியா
    பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி  உச்ச நீதிமன்றம்
    கம்பம் திராட்சைக்கு கிடைத்த புவிசார் குறியீடு - நன்மைகள் என்ன? தமிழ்நாடு
    'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் - தமிழக அரசு எச்சரிக்கை  தமிழக அரசு

    அதிமுக

    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு
    ஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எடப்பாடி கே பழனிசாமி
    சென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள் திமுக
    அதிமுக வழக்கு: 4வது நாள் விசாரணையின் சுருக்கம் இந்தியா

    திமுக

    இன்பநிதி புகைப்படங்கள்: சூசகமாக பதிலளித்த கிருத்திகா உதயநிதி! உதயநிதி ஸ்டாலின்
    தமிழ்நாடு-தமிழகம் சர்ச்சை: என்ன நடக்கிறது ட்விட்டரில்? தமிழ்நாடு
    சேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது தமிழ்நாடு
    திமுக-பாஜக சண்டைக்குள் சிக்கி கொண்ட தல-தளபதி தமிழ்நாடு

    கருணாநிதி

    சென்னையில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் - கருத்து கேட்புக்கூட்டத்தில் சீமான் எச்சரிக்கை மெரினா கடற்கரை
    தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல் தமிழக அரசு
    பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப்பணித்துறை மனு தாக்கல் தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025