NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பயணிகளின் வசதிக்காக சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்களின் சேவை இன்று (செப்.9) முதல் தொடக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பயணிகளின் வசதிக்காக சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்களின் சேவை இன்று (செப்.9) முதல் தொடக்கம்
    சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்களின் சேவை தொடக்கம்

    பயணிகளின் வசதிக்காக சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்களின் சேவை இன்று (செப்.9) முதல் தொடக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 09, 2024
    04:53 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு ஒரு மின்சார ரயிலும், திருவள்ளூருக்கு இரண்டு மின்சார ரயில்களும் தென்னக ரயில்வேயால் திங்கட்கிழமை (செப்டம்பர் 9) முதல் கூடுதலாக இயக்கப்படுகிறது.

    முன்னதாக தென்னக ரயில்வே, கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் திங்கட்கிழமை முதல் மூன்று புதிய ரயில் சேவை இயக்கப்படும் என அறிவித்தது.

    இதன்படி, திங்கட்கிழமை முதல் ரயில் எண். 43012, ஆவடி - சென்னை சென்ட்ரல் இடையே இயங்குகிறது. இதன் முதல் பயணம் ஆவடியில் இருந்து காலை 9.50 மணிக்கு தொடங்கியது.

    ரயில் எண். 43219 திருவள்ளூரில் இருந்து காலை 10:40மணிக்கு கிளம்பி சென்னை சென்ட்ரலுக்கு சென்றது.

    அதேபோல் மற்றொரு ரயில் திருவள்ளூரில் இருந்து மாலை 3.50 மணிக்கு கிளம்பி சென்ட்ரல் நோக்கி சேவையைத் தொடங்கியது.

    சேவை நீட்டிப்பு

    ரயில் சேவை நீட்டிப்பு

    புதிய ரயில் சேவைகளைத் தவிர சில ரயில் சேவைகள் திங்கட்கிழமை கூடுதல் தூரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி ரயில் எண். 42017 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.10க்கு கிளம்பி கும்மிடிப்பூண்டி வரை இயங்கி வந்த நிலையில் தற்போது சூல்லூர்பேட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ரயில் எண். 40202, இரவு 8.55க்கு கூடுவாஞ்சேரியில் இருந்து கிளம்பி தாம்பரம் செல்லும் ரயில் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ரயில் எண். 40206, இரவு 10.11 மணிக்கு கூடுவாஞ்சேரியில் இருந்து கிளம்பி தாம்பரம் செல்லும் ரயில் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நேரம் மாற்றம்

    ரயில்களின் நேரம் மாற்றம்

    மேலும், ரயில் எண். 40208, இரவு 10.55 மணிக்கு கூடுவாஞ்சேரியில் இருந்து கிளம்பி தாம்பரம் செல்லும் ரயில் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ரயில் எண். 40210, இரவு 11.20 மணிக்கு கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவை தவிர சென்னையில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் மின்சார ரயில் சேவைகளின் திங்கட்கிழமை முதல் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி, அரக்கோணம் வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி, சூல்லூர்பேட்டை வழித்தடத்தில் இயங்கும் ரயில்களும் சுமார் 5 முதல் 15 நிமிடங்கள் முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் இயங்க ஆரம்பித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    தென்னக ரயில்வே அறிவிப்பு

    Time Table update – Revised timings for the following EMU train services with effect from 09.09.2024.

    Passengers, kindly take note.#SouthernRailway #RailwayUpdate #RailwayAlert pic.twitter.com/PlB3Kwvrrz

    — DRM Chennai (@DrmChennai) September 6, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ரயில்கள்
    தமிழகம்
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்
    'கொலைகாரரோ பயங்கரவாதியோ அல்ல': முன்னாள் IAS பூஜா கெத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா

    சென்னை

    இந்திய கடலோர காவல்படை தலைவர் ராகேஷ் பால் மாரடைப்பால் காலமானார் பாதுகாப்பு துறை
    போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை ECR -இல் புதிய உயர்மட்ட மேம்பாலம்: அமைச்சர் தகவல் போக்குவரத்து
    தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு துவங்கியது: 28 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் முதலீடு
    பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அன்பில் மகேஷ்

    ரயில்கள்

    சென்னை செல்லும் ரயில்கள் ரத்து: உதவி எண்களை அறிவித்தது தெற்கு ரயில்வே  சென்னை
    இந்திய நாட்டின் முதல் புல்லட் ரயில் நிலையம் - வைரலாகும் வீடியோ  குஜராத்
    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் சேவை மீண்டும் துவங்கியது செங்கல்பட்டு
    பெய்ஜிங்கில் மெட்ரோ ரயில்கள் மோதல்- 515 பேர் காயம் பெய்ஜிங்

    தமிழகம்

    தர்மபுரியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 7,033 மாணவர்கள் பயன் தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்; ஆகஸ்ட் 31 பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்  வந்தே பாரத்
    சோலார், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை தமிழ்நாடு

    தமிழ்நாடு செய்தி

    சென்னையில் நாளை முதல் வழக்கம்போல் மின்சார ரயில் சேவை; ரயில்வே அறிவிப்பு ரயில்கள்
    ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் பொருளாதார நன்மைகள் ஏற்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியீடு தமிழக அரசு
    கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம்; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார் கலைஞர் கருணாநிதி
    தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 20) மின்தடை ஏற்படும் பகுதிகள்; முழுமையான பட்டியல் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025