NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒடிசா அரசாங்கத்தில் தமிழருக்கு முக்கிய பொறுப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒடிசா அரசாங்கத்தில் தமிழருக்கு முக்கிய பொறுப்பு
    கார்த்திகேய பாண்டியன், முதல்வர் பிஜி பட்டினநாய்க்க்கு அரசியல் வாரிசாக பார்க்கப்படுகிறார்.

    ஒடிசா அரசாங்கத்தில் தமிழருக்கு முக்கிய பொறுப்பு

    எழுதியவர் Srinath r
    Oct 24, 2023
    02:20 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற வி கார்த்திகேய பாண்டியனுக்கு, ஒடிசாவில் அமைச்சருக்கு நிகரான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேய பாண்டியன் விருப்ப ஓய்வு கோரி இருந்த நிலையில், மத்திய அரசு அவரின் ஓய்வுக்கு ஒப்புதல் அளித்தது.

    இந்நிலையில் விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாளே அவருக்கு, புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    "மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக கார்த்திகேய பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இது கேபினட் அமைச்சருக்கு இணையான பதவி." என அம்மாநில தலைமைச் செயலாளர் வெளியிட்டு இருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    2nd card

    நவீன் பட்நாயக் அறிவுறுத்தலில் பிறப்பு ஓய்வு பெற்ற கார்த்திகேய பாண்டியன்?

    ஐஏஎஸ் அதிகாரியான கார்த்திகேய பாண்டியன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவுறுத்தலின் பேரிலேயே விருப்ப ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது.

    ஒரிசா அரசாங்கத்திலும், பிஜு ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் நவீனுக்கு அடுத்தபடியாக, அதிக செல்வாக்கு மிக்க நபராக கார்த்திகேய பாண்டியன் வலம் வருவதாக சொல்லப்படுகிறது.

    மேலும் இவர் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேய பாண்டியன், கடந்த 2000 ஆண்டு ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார்.

    கலஹண்டி மாவட்டத்தில் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டவர், பின்னர் பல மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.

    இவர் 2012 ஆம் ஆண்டு முதல் முதல்வர் நவீனின் தனிச்செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒடிசா
    தமிழ்நாடு
    மத்திய அரசு
    முதல் அமைச்சர்

    சமீபத்திய

    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா
    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா

    ஒடிசா

    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள் இந்தியா
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது  இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர் இந்தியா
    ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்! இந்தியா

    தமிழ்நாடு

    தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் - மீண்டும் உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணையம்  காவிரி
    ஆயுத பூஜை கொண்டாட்டம் - சென்னையிலிருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்  சென்னை
    தமிழகம்-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி இலங்கை
    'ஆப்ரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து தமிழகம் திரும்பிய 28 தமிழர்கள் இஸ்ரேல்

    மத்திய அரசு

    நிறைவேறியது 33% பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா  நாடாளுமன்றம்
    முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதி மதிப்பெண் ரத்து - இந்திய மருத்துவ கவுன்சில்  நீட் தேர்வு
    மீண்டும் 'அவசர எச்சரிக்கை': ஸ்மார்ட்போன்களில் ஃபிளாஷ் செய்தி சோதனை ஓட்டத்தை நடத்திய மத்திய அரசு ஸ்மார்ட்போன்
    புதிய தேசிய விஞ்ஞான்புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு - மத்திய அரசு  அறிவியல்

    முதல் அமைச்சர்

    'எனது காரும் சிக்னலில் நின்று செல்லும்' - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி  புதுச்சேரி
    கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, விரைவில் நவீன இயந்திரம்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு  இந்தியா
    கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி கோலிவுட்
    பால் கொள்முதல் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - பால்வளத்துறை அமைச்சர்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025