NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மும்பை குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளி ராணா நாடு கடத்தப்படுவதில் மேலும் தாமதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மும்பை குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளி ராணா நாடு கடத்தப்படுவதில் மேலும் தாமதம்
    மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தஹாவூர் ராணா

    மும்பை குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளி ராணா நாடு கடத்தப்படுவதில் மேலும் தாமதம்

    எழுதியவர் Srinath r
    Oct 06, 2023
    10:50 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி தஹாவூர் ராணா நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மனு தாக்கல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது.

    கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் ஒன்பதாவது சர்க்யூட் நீதிமன்றத்தில் ஆஜரான ராணா இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியிருந்தார்.

    ராணாவின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு மனு தாக்கல் செய்ய நவம்பர் 9 ஆம் தேதி வரை காலாவகாசத்தை நீட்டித்துள்ளது.

    கால அவகாசம் நீட்டிக்கப்படும் முன், அவர் அக்டோபர் 10 ஆம் தேதி மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தார்.

    ராணாவின் மனு மீது அமெரிக்க அரசு டிசம்பர் 11 ஆம் தேதி பதிலளிக்கும்.

    2nd card

    மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு மூலமாக செயல்பட்டவர்

    தற்போது அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள தஹாவூர் ராணா கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு மூலமாக செயல்பட்டவர்.

    மும்பை குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டிய பாகிஸ்தானி- அமெரிக்க தீவிரவாதியான டேவிட் கோல்மன் ஹெட்லியுடன் ராணா தொடர்புகளை கொண்டிருந்தார்.

    ராணா கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிடிபட்டார்.

    கடந்த மே 16 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ராணாவை நாடு கடத்த அனுமதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

    அந்த உத்தரவுக்கு எதிராக ராணா நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார்.

    தற்போது ராணா தான் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    மும்பை
    இந்தியா
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    அமெரிக்கா

    அமெரிக்காவில் நடக்கும் டி20 உலகக்கோப்பைக்கான 3 மைதானங்களை உறுதிப்படுத்தியது ஐசிசி ஐசிசி
    ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரூபர்ட் முர்டோக் ஓய்வு உலகம்
    துருக்கியில் சிகிச்சைப்பெறும் குழந்தை-சென்னைக்கு அழைத்துவர முதல்வர் ரூ.10 லட்சம் நிதியுதவி மு.க ஸ்டாலின்
    உலகின் மிகச்சிறிய கேமராவை உருவாக்கி சாதனை படைத்த அமெரிக்க நிறுவனம் தொழில்நுட்பம்

    மும்பை

    இந்தியாவில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் - மாத வாடகை 42 லட்சமா? ஆப்பிள் நிறுவனம்
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    மும்பையில் திறக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர் - பிரதமர் மோடியை சந்திக்கும் டிம் குக்! ஆப்பிள் தயாரிப்புகள்
    ஆப்பிளின் மும்பை BKC ஸ்டோரில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?  ஆப்பிள்

    இந்தியா

    நியூஸ் கிளிக்குடன் தொடர்புடைய பத்திரிகையாளர்களை சோதித்து வரும் டெல்லி போலீஸ்  டெல்லி
    'சனாதன தர்மம் மட்டுமே மதம், மற்றவை அனைத்தும் அதன் உட்பிரிவுகள்': யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேசம்
    கனடாவை சேர்ந்த 40 தூதரக அதிகாரிகளை வெளியேற்றுகிறது இந்தியா   கனடா
    ஜிம்பாப்வே விமான விபத்தில் உயிரிழந்த இந்திய தொழிலதிபர் ஹார்பால் ரந்தாவா வணிகம்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக செனட்டர் அன்வர்-உல்-ஹக் காக்கர் தேர்வு பிரதமர்
    பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் சீனர்கள் மீது துப்பாக்கி சூடு  சீனா
    அடிப்படை வசதிகள் கூட இல்லாத தனிமைச் சிறையில் முன்னாள் பாக்., பிரதமர் இம்ரான் கான் இம்ரான் கான்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் அமைச்சரவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025