NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உக்ரைன் தலைநகர் கியேவை சென்றடைந்த பிரதமர் மோடி; ஆரத்தழுவி வரவேற்ற ஜெலென்ஸ்கி
    அடுத்த செய்திக் கட்டுரை
    உக்ரைன் தலைநகர் கியேவை சென்றடைந்த பிரதமர் மோடி; ஆரத்தழுவி வரவேற்ற ஜெலென்ஸ்கி
    உக்ரைனுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி தான்

    உக்ரைன் தலைநகர் கியேவை சென்றடைந்த பிரதமர் மோடி; ஆரத்தழுவி வரவேற்ற ஜெலென்ஸ்கி

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 23, 2024
    03:51 pm

    செய்தி முன்னோட்டம்

    இரண்டு நாள் போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார்.

    இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு உக்ரைனுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் இவர்தான்.

    போலாந்திலிருந்து 10 மணிநேர ரயில் பிரயாணத்தின் மூலம் உக்ரைன் தலைநகர் கீவை சென்றடைந்தார் பிரதமர் மோடி.

    அங்கே அவரை உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கைகுலுக்கி வரவேற்றார்.

    பிரதமர் மோடி காலை 7:30 மணியளவில் (உள்ளூர் நேரம் கியேவுக்கு) வந்து, காலை 7:55 மணியளவில் (உள்ளூர் நேரம்) ஹோட்டலுக்கு சென்றடைந்தார்.

    கீவ் வந்தடைந்த பிரதமரை, புலம்பெயர்ந்த இந்தியர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' முழக்கங்களுடன் வரவேற்றனர்.

    சந்திப்பு

    உக்ரைன் ஜனாதிபதியுடன் சந்திப்பு

    பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கிய்வில் சந்தித்தார்.

    மரின்ஸ்கி ஜனாதிபதி மாளிகையில் திட்டமிடப்பட்ட இருதரப்பு சந்திப்புக்கு முன்னர், உக்ரைன் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள தியாகிகள் கண்காட்சியின் நுழைவாயிலில் இரு தலைவர்களும் கைகுலுக்கி, அன்பான அரவணைப்பை பரிமாறிக்கொண்டனர்.

    அந்த கண்காட்சியில் போரினால் இறந்து போன குழந்தைகளின் நினைவிடத்தில் இரு தலைவர்களும் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டனர்.

    அப்போது பிரதமர் மோடி, அரவணைப்பாக உக்ரைன் ஜனாதிபதியின் தோள் மீது கை வைத்து ஆறுதல் கூறினார்.

    போலந்தில் இருந்து உக்ரைன் கிளம்பும் முன்னர், "போர்க்களத்தில் எந்த பிரச்சனையும் தீர்க்கப்பட முடியாது" என்று மோடி கூறினார்.

    மேலும்,"அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தை இந்தியா ஆதரிக்கிறது" எனத்தெரிவித்திருந்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    உக்ரைன் தேசிய அருங்காட்சியகத்தில் சந்தித்துக்கொண்ட தலைவர்கள்

    WATCH | PM #NarendraModi and Ukrainian President #VolodymyrZelenskyy honor the memory of children at the Martyrologist Exposition in #Kyiv.#PMModi #Ukraine #MartyrologistExposition pic.twitter.com/vZoFGpU0lY

    — TIMES NOW (@TimesNow) August 23, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உக்ரைன்
    உக்ரைன் ஜனாதிபதி
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    உக்ரைன்

    உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு  ரஷ்யா
    உக்ரைனுக்கு $375 மில்லியன் மதிப்பிலான புதிய இராணுவ உதவியை வழங்க இருக்கிறது அமெரிக்கா  ரஷ்யா
    உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி  இந்தியா
    சோவியத் கால அணை தகர்க்கப்பட்டது: உக்ரைனில் பெரும் வெள்ளம் உலகம்

    உக்ரைன் ஜனாதிபதி

    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் அமெரிக்கா
    உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர்  இந்தியா
    ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் பரபரப்பு  ரஷ்யா
    இந்தியாவை திசை திருப்பும் முயற்சி அர்த்தமற்றது- மேற்கு உலகுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை பிரதமர்

    பிரதமர் மோடி

    மன் கி பாத் உரையில் பிரதமர் குறிப்பிட்ட அரக்கு காபியை பற்றி தெரிந்து கொள்வோமா?! ஆந்திரா
    'ராகுல் காந்தி போல் நடந்து கொள்ளாதீர்கள்': எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை  மக்களவை
    மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார் மக்களவை
    குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றுவார் குடியரசு தலைவர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025