NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கல்லூரி விடுதிக்குள் தொழுததால் வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கல்லூரி விடுதிக்குள் தொழுததால் வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல்

    கல்லூரி விடுதிக்குள் தொழுததால் வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 17, 2024
    01:45 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்றிரவு குஜராத் பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்த கும்பல், நமாஸ் செய்துகொண்டிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் மாணவர்களைத் தாக்கியதால் ஐந்து சர்வதேச மாணவர்கள் காயமடைந்தனர்.

    மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, குஜராத்தின் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பேசி, குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் கைது செய்து, நியாயமான விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

    அகமதாபாத்தில் உள்ள அந்த பல்கலைக்கழகத்தில் மசூதி இல்லை என்பதால், ரமலான் நோம்பை முடிப்பதற்காக ஒரு விடுதியில் கூடிய இஸ்லாமிய மாணவர்கள் அங்கு தொழுகை நடத்தி இருக்கின்றனர்.

    இந்நிலையில், அதே நேரத்தில், தடி மற்றும் கத்திகளுடன் விடுதிக்குள் நுழைந்த ஒரு கும்பல், அவர்களைத் தாக்கியதுடன், அவர்களின் அறைகளையும் சேதப்படுத்தியதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    குஜராத் 

    விடுதியில் தொழுகை நடத்த அனுமதித்ததற்காக தடியடி 

    விடுதியின் பாதுகாவலர் கும்பலைத் தடுக்க முயன்றதாகவும், ஆனால் அவரால் அந்த கும்பலை தடுக்க முடியவில்லை என்றும் மாணவர்கள் கூறியுள்ளனர்.

    தாக்குதல் நடத்திய கும்பலில் இருந்தவர்கள், விடுதியில் தொழுகை நடத்த அனுமதித்தது யார் என்று அதட்டிக் கேட்டதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு மாணவர் கூறியுள்ளார்.

    "அறைகளுக்குள்ளும் சென்று அவர்கள் எங்களைத் தாக்கினர். மேலும், அவர்கள் மடிக்கணினிகள், தொலைபேசிகள் மற்றும் பைக்குகளை சேதப்படுத்தினர்," என்று அவர் கூறியுள்ளார்.

    இதனால், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் துர்க்மெனிஸ்தானைச் சேர்ந்த தலா ஒரு மாணவர், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இரு மாணவர்கள் காயமடைந்தனர்.

    "போலீசார் வருவதற்குள் அந்த கும்பல் தப்பியோடிவிட்டது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் உள்ளனர். தூதரகங்களுக்கு தகவல் கொடுத்துள்ளோம்." என்று ஒரு மாணவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குஜராத்

    சமீபத்திய

    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்

    குஜராத்

    பிபர்ஜாய் புயல்: 940 கிராமங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது  இந்தியா
    உள்நாட்டு கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியிலிருந்து குஜராத்துக்கு மாறிய ரவி பிஷ்னோய் கிரிக்கெட்
    அமெரிக்காவின் பென்டகனை பின்தள்ளிய சூரத்தைச் சேர்ந்த வைர வர்த்தக மையக் கட்டிடம் வணிகம்
    அகமதாபாத்தில் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்த குஜராத் அரசு விருப்பம் காமன்வெல்த் விளையாட்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025