NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பழிக்கு பழி: கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    பழிக்கு பழி: கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது இந்தியா
    கனேடிய பிரதமரின் குற்றச்சாட்டுகளை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

    பழிக்கு பழி: கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது இந்தியா

    எழுதியவர் Sindhuja SM
    Sep 19, 2023
    11:45 am

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தான் பயங்கரவாதியின் கொலை வழக்கில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டி உள்ள நிலையில், இன்னும் ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு ஒரு கனேடிய தூதரக அதிகாரிக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டின் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் பெரிய அளவில் அதிகரித்திருக்கும் தருணத்தில், இந்தியாவுக்கான கனட தூதர் கேமரூன் மேக்கேயை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று அழைத்து பேசியது.

    "கனேடிய மண்ணில் ஒரு கனேடிய குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கம் தலையிடுவது நமது இறையாண்மையை மீறுவதாகும். இது சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது" என்று ஜஸ்டின் ட்ரூடோ திங்கள்கிழமை கனட நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

    சிகவ்ஞ்

    அடுத்த ஐந்து நாட்களுக்குள் கனேடிய தூதரக அதிகாரி வெளியேற வேண்டும் என்ற உத்தரவு

    ஆனால், கனேடிய பிரதமரின் குற்றச்சாட்டுகளை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

    இதற்கிடையில், ஒரு கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    "இந்தியாவிற்கான கனேடிய தூதர் இன்று வரவழைக்கப்பட்ட்டார். இந்தியாவில் இருக்கும் ஒரு மூத்த கனேடிய தூதரக அதிகாரியை வெளியேற்றுவதற்கான இந்திய அரசின் முடிவு குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தூதர் அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். எங்கள் உள் விவகாரங்களில் கனேடிய தூதர்களின் தலையீடு மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவது குறித்து இந்திய அரசின் வளர்ந்து வரும் கவலையை இந்த முடிவு பிரதிபலிக்கிறது."

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கனடா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    36 மணி நேரமாக இந்தியாவில் சிக்கி தவித்த கனேடிய பிரதமர் கனடாவுக்கு புறப்பட்டார்  கனடா
    இந்தியா வழங்கிய விமான உதவியை மறுத்துவிட்டார் கனேடிய பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ
    ரஷ்ய வாகன உற்பத்தியாளர்களிடம் இந்தியாவை உதாரணம் காட்டி பாராட்டிய ரஷ்ய அதிபர் புதின்  ரஷ்யா

    கனடா

    கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம் உலக செய்திகள்
    10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிக்க இருக்கும் கனடா உலகம்
    இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம் இந்தியா
    'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில் உலக செய்திகள்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி இந்தியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025