NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை': நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை': நீதிமன்றம் 
    திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது

    'திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை': நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 10, 2023
    12:59 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

    மனைவி 18 வயதுக்கு மேல் இருந்தால், இந்திய தண்டனைச் சட்டத்தின்(ஐபிசி) கீழ் திருமண பலாத்காரத்தை குற்றமாக கருத முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யபட்ட ஒரு நபருக்கு தீர்ப்பு வழங்கும் போது நீதிமன்றம் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

    ஜிப்க

    'ஐபிசி 377-வது பிரிவின் கீழ் தண்டிக்க முடியாது': நீதிபதிகள்

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஐபிசி 377-வது பிரிவின் கீழ் தண்டிக்க முடியாது என்று கூறிய நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா அடங்கிய அமரவு, திருமண பலாத்காரம் இந்த நாட்டில் இன்னும் குற்றமாக்கப்படவில்லை என்று கூறியது.

    திருமண பலாத்காரத்தை குற்றமாக்கக் கோரும் மனுக்கள் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது

    டவ்கில்ஜி

    குற்றவாளிக்கு தண்டனை அளிக்கப்பட்டதா?

    தன் கணவனுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்த மனுதாரர், தன் கணவன் தன்னை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறி இருந்தார்.

    எனவே, இந்திய சட்டத்தின்படி பாலியல் குற்றங்களுக்காக அவரை தண்டிக்க முடியாது என்று கூறிய நீதிமன்றம், துன்புறுத்துதல்(498-A), காயப்படுத்துதல் (IPC 323) ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

    சுஜிகிவ்,கே

    திருமண பலாத்கார விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு 

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், திருமண பலாத்காரத்தை குற்றமாகக் கோரும் மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

    திருமண பலாத்காரத்தை குற்றமாக்குவது சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    பலாத்காரம் என்பது இந்தியாவில் மிகப்பெரும் குற்றமாகும். புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் குற்றவியல் சட்டங்களின்படி, பலாத்கார குற்றத்திற்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.

    ஆனால், இந்தியாவில் திருமண பலாத்காரம் இன்றுவரை குற்றமாக்கப்படவில்லை.

    டவ்க்ஜ்யோ

    புதிய குற்றவியல் மசோதாவிலும் எந்த மாற்றமும் இல்லை

    சில மாதங்களுக்கு முன், மத்திய அரசு முன்மொழிந்த புதிய குற்றவியல் மசோதாவில் கூட திருமண பலாத்காரத்திற்கு எதிராக எந்த விதியும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

    "பதினெட்டு வயதை தாண்டிய தன் மனைவியுடன் ஒரு ஆண் உடலுறவு கொள்வது பலாத்காரம் அல்ல" என்று இந்த புதிய குற்றவியல் மசோதா கூறுகிறது.

    இதற்கு எதிரான சட்டங்கள் எதுவும் இந்தியாவில் இல்லாததால், திருமணம் என்ற பெயரில் பலாத்காரம் செய்வதற்கு சட்டம் ஒத்துழைப்பதாக சமூக ஆர்வலர்கள் பல வருடங்களாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சட்டம் பேசுவோம்
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    சட்டம் பேசுவோம்

    சட்டம் பேசுவோம்: ஈவ் டீசிங்கிற்கு எதிரான இந்திய சட்டங்களின் பட்டியல் இந்தியா
    சட்டம் பேசுவோம்: புதிய குற்றவியல் சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்கள் இந்தியா
    சட்டம் பேசுவோம்: பதின் பருவ உடலுறவை குற்றமற்றதாக்குவது குறித்து விவாதிக்கும் உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    சட்டம் பேசுவோம்: திருமண-பலாத்காரத்திற்கு எதிராக இந்தியாவில் சட்டங்கள் இல்லையா? இந்தியா

    இந்தியா

    சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா மிசோரம்
    இந்தியா: ஒரே நாளில் மேலும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    ஜூனியர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் 3 வெள்ளி வென்றது இந்தியா குத்துச்சண்டை
    சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கு இலவச மருத்துவ சிகிச்சை, மத்திய அரசின் புதிய திட்டம் விபத்து

    உச்ச நீதிமன்றம்

    வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்  தமிழ்நாடு
    26 வார கருவை கலைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் இந்தியா
    LGBTQIA+ தம்பதிகளின் உரிமைகளை முடிவு செய்ய குழு அமைக்க உத்தரவு டி.ஒய்.சந்திரசூட்
    LGBTQIA+ தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு ஆதரவாக தீர்ப்பளித்த தலைமை நீதிபதி இந்தியா

    உத்தரப்பிரதேசம்

    ஞானவாபி மசூதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி  உயர்நீதிமன்றம்
    உ.பி.யில் கொடூரம்; சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கும்பல் இந்தியா
    அயோத்தி ராமர் கோவிலுக்காக உலகின் மிகப்பெரிய 400 கிலோ பூட்டை உருவாக்கிய தம்பதி  இந்தியா
    யோகி ஆதித்யநாத்தை அடுத்து அகிலேஷ் யாதவ்வை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்  ரஜினிகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025