NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி? முதல்வர் பைரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி? முதல்வர் பைரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

    மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி? முதல்வர் பைரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 30, 2023
    02:17 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் முதல்வர் என் பைரேன் சிங் தனது பதவியை வெள்ளிக்கிழமை (ஜூன் 30) ராஜினாமா செய்வதாக ஊடகங்கள் எழுந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு, ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பைரேன் சிங் ஆளுனருடனான சந்திப்பின் போது, அதிகாரப்பூர்வமாக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, ஜூன் 25 அன்று டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் பைரேன் சிங் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூர் இனக் கலவரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வன்முறையை தடுக்க தவறியதாக தற்போது மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

    aftermath of biren singh resignation

    மணிப்பூரில் சட்டசபை இடைநிறுத்தப்படும் என தகவல்

    இரு தினங்களுக்கு முன்பு, மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவும் தனியாக டெல்லி சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து மாநிலத்தின் நிலைமை குறித்து பேசியுள்ளார்.

    இந்நிலையில், தற்போது மணிப்பூரில் இருந்து வரும் தகவல்களின்படி பைரேன் சிங் ராஜினாமாவை சமர்ப்பிப்பார் என்றும், அதன் பின்னர் சட்டசபை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, நிர்வாகத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என கூறப்படுகிறது.

    மணிப்பூரில் நிலைமையை தவறாக கையாண்டதற்காக பைரேன் சிங் மீது எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, அவரது கட்சியில் உள்ள தலைவர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளதால், இந்த முடிவுக்கு எதிர்ப்பு இருக்காது என மத்திய அரசு கருதுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    மத்திய அரசு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  மத்திய அரசு

    மத்திய அரசு

    விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை! மல்யுத்தம்
    எலெக்ட்ரிக் பைக்குகளின் விலையை ரூ.30,000 வரை உயர்த்திய மேட்டர் எனர்ஜி.. ஏன்? எலக்ட்ரிக் பைக்
    தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து - மா.சுப்ரமணியம் டெல்லி செல்ல முடிவு  தமிழக அரசு
    பிரிஜ் பூஷனை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை: டெல்லி காவல்துறை  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025