மகளிடம் அத்துமீறிய நபரை பழிதீர்க்க குவைத்தில் இருந்து ஆந்திராவுக்கு வந்த தந்தை
குவைத்தைச் சேர்ந்த 35 வயதான ஆஞ்சநேய பிரசாத் என்ற புலம்பெயர்ந்த தொழிலாளி, ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம், ஒபுலவாரிப்பள்ளியில் தனது உறவினரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆஞ்சநேயுலு (59) என்பவர் டிசம்பர் 6 மற்றும் 7ஆம் தேதி இரவு இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஆஞ்சநேயுலு, தனது மைனர் மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக பிரசாத் குற்றம் சாட்டினார். அதோடு இந்த விவகாரம் குறித்து உள்ளூர் காவல்துறையினரிடம் தரப்பட்ட அவரது புகாரின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அவரது வாதம்.
குவைத் திரும்பிய குற்றவாளி வீடியோவில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
சம்பவத்திற்குப் பிறகு, குவைத் திரும்பிய பிரசாத், குற்றத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட வீடியோவை வெளியிட்டார். வீடியோவில், ஆஞ்சநேயுலு தனது மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக தனது குற்றச்சாட்டை மீண்டும் வலியுறுத்தினார் மற்றும் உள்ளூர் காவல்துறையின் செயலற்ற தன்மை குறித்து விரக்தியை வெளிப்படுத்தினார். இந்த விவரங்களை போலீஸ் அதிகாரி என் சுதாகர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார்.
மகளின் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் புறக்கணிக்கப்பட்டதாக பிரசாத் கூறுகிறார்
இந்தியாவில் வசிக்கும் பிரசாத்தின் 12 வயது மகள், தனது தாத்தா பாட்டியுடன் தங்கியுள்ளார். சில காலம் அத்தை லக்ஷ்மியுடன் அவர் வாசிப்பதற்காக சென்றுள்ளார். இந்த நேரத்தில் தான் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமியின் மாமனார் சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமி நடந்த சம்பவத்தைப் பற்றி லட்சுமியிடம் கூறிய பின்னரும், இதுபற்றி அமைதி காக்கும்படி கூறப்பட்டதாக பிரசாத் தெரிவிக்கிறார். பிரசாத்தின் மனைவி சந்திரகலா துஷ்பிரயோகம் பற்றி அறிந்ததும், அவர் உள்ளூர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். எனினும் காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களை எச்சரித்து விடுவித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது பிரசாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.