NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில் எம்பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில் எம்பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ்

    கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில் எம்பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ்

    எழுதியவர் Srinath r
    Dec 08, 2023
    05:42 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

    எம்பி மஹுவாவை விசாரித்த பாராளுமன்ற நெறிமுறைகள் குழு, அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அறிக்கை சமர்ப்பித்து இருந்தது.

    இந்த அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவரை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

    "எம்.பி. மஹுவா மொய்த்ராவின் நடத்தை ஒழுக்கக்கேடான மற்றும் ஒரு எம்பி என்ற வகையில் அநாகரீகமானது என்ற குழுவின் முடிவுகளை இந்த சபை ஏற்றுக்கொள்கிறது. எனவே, அவர் எம்பியாக நீடிப்பது ஏற்புடையதல்ல" என சபாநாயகர் தெரிவித்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

    2nd card

    மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

    நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க ₹2 கோடி ரொக்கம் மற்றும் "ஆடம்பர பரிசு பொருட்களை" ஹிராநந்தனி குழுமத்தைச் சேர்ந்த, தர்ஷனிடம் பெற்றதாக மஹுவா மீது குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும், கேள்விகளை பதிவேற்றம் செய்வதற்காக, நாடாளுமன்ற லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை, மஹுவா தர்ஷனிடம் பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

    இதை விசாரித்த நாடாளுமன்ற நெறிமுறை குழு, மஹுவா செயல்பாடுகள் "ஆட்சியபனைக்குரிய, நெறிமுறை அற்ற மற்றும் கொடூரமான குற்றம்" என குறிப்பிட்டிருந்தது.

    இந்நிலையில், நெறிமுறை குழுவின் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு, தற்போது மஹுவா டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

    3rd card

     மஹுவா குற்றம் புரிந்ததை பாஜக எம்பி நிஷிகாந்த் துபே எவ்வாறு வெளிக்கொணர்ந்தார்?

    கடந்த அக்டோபர் மாதத்தில் எம்பி நிஷிகாந்த் துபே, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா,

    மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோருக்கு எழுதி இருந்த கடிதத்தில்,

    மஹுவா மீது கேள்வி கேட்பதற்காக பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு சுமத்தி, விசாரிக்க வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், மஹுவாவின் முன்னாள் காதலர் எனக் கூறப்படும் ஜெய் அனந்த் தேஹாத்ராய், எழுதிய கடிதத்தை ஆதாரமாக தூபே வழங்கினார்.

    இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மஹுவா, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், முன் விரோதத்திலும் தூபே மற்றும் தேஹாத்ராய் செயல்படுவதாக கூறியிருந்தார்.

    4th card

    எம்பி நிஷிகாந்த் துபே தன் கடிதத்தில் என்ன எழுதி இருந்தார்?

    ஜெய் அனந்த் டெஹாத்ராய் கடிதத்தை மேற்கோள் காட்டி நிஷிகாந்த் துபே,

    மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள், தர்ஷன் ஹிராநந்தனி மற்றும் அவரது குழுமத்தின் "வணிக நலன்களைப் பாதுகாக்கும் அல்லது நிலைநாட்டும்" நோக்கத்துடன் கேட்கப்பட்டவை என்று குற்றம் சாட்டினார்.

    இந்த கேள்விகள் பெரும்பாலும் ஹிராநந்தனியின் போட்டி நிறுவனமான அதானி குழுமத்தை மையமாக வைத்து, ரொக்கம் மற்றும் பரிசுகளுக்காக கேட்கப்பட்டதாக டெஹாத்ராய் குற்றம் சாட்டினார்.

    கடந்த சில ஆண்டுகளில் மொய்த்ரா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை "கடுமையாக" குறிவைத்து,

    அடிக்கடி அதானி குழுவைக் குறிப்பிட்டு, தான் "அரசாங்கத்தை விமர்சிப்பது" போன்ற தோற்றத்தை உருவாக்குவதாக டெஹாத்ராய் கூறினார்.

    5th card

    ஒப்புதல் சாட்சியாக மாறிய தர்ஷன் ஹிராநந்தனி

    பாஜக எம்பி தூபே, இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக அனைத்து ஆதாரங்களையும் தன் கடிதத்துடன் இணைத்து இருப்பதாக தெரிவித்தார்.

    முதலில் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மஹுவா பின்னர், நாடாளுமன்ற லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை தர்ஷனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டார்.

    மேலும், ஹிராநந்தனி தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்திலும் இது தொடர்பான பல உண்மைகளை அவர் தெரிவித்திருந்தார்.

    துபேவின் குற்றச்சாட்டுகளும், அதற்கு ஆதாரமான டெஹாத்ராய் கடிதமும், ஹிராநந்தனி தாக்கல் செய்த பிரமாண பத்திரமும், எம்பி மஹுவா டிஸ்மிஸ் செய்யப்பட காரணமானது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரிணாமுல் காங்கிரஸ்
    நாடாளுமன்றம்
    பிரதமர் மோடி
    பிரதமர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    திரிணாமுல் காங்கிரஸ்

    திரிபுரா வாக்கெடுப்பு: தெரிந்துகொள்ள வேண்டியவை இந்தியா
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் மேற்கு வங்காளம்
    தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் இந்தியா

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறது மத்திய அரசு  இந்தியா
    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் வெளியானது  இந்தியா
    இனி பிறப்பு சான்றிதழ்களும் அடையாள ஆவணமாக அங்கீகரிக்கப்படும்: மத்திய அரசு மத்திய அரசு
    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: நாட்டையே உலுக்கப்போகும் அறிவிப்புகள் நாளை வெளியாகுமா? இந்தியா

    பிரதமர் மோடி

    RRTS ரயில் சேவை, டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. கட்டணம் எவ்வளவு? டெல்லி
    பாலஸ்தீன அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி; இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் பாலஸ்தீனம்
    மறைந்த பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தமிழ்நாடு
    மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி பிரதமர்

    பிரதமர்

    சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானார் சீனா
    மஹுவா மொய்த்ரா குறித்த விவரங்களைக் கேட்டு, மத்திய அமைச்சகங்களுக்கு நெறிமுறைக் குழு கடிதம் திரிணாமுல் காங்கிரஸ்
    நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    காசா மீது இரண்டாவது கட்டத் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025