NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 1967க்கு பிறகு முதல்முறை; எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத மாநிலமாகிறது மகாராஷ்டிரா
    அடுத்த செய்திக் கட்டுரை
    1967க்கு பிறகு முதல்முறை; எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத மாநிலமாகிறது மகாராஷ்டிரா
    57 ஆண்டுகளில் முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத மாநிலமாகிறது மகாராஷ்டிரா

    1967க்கு பிறகு முதல்முறை; எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத மாநிலமாகிறது மகாராஷ்டிரா

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 24, 2024
    10:28 am

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் முடிவுகள் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சி (பாஜக), முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளும் மகாயுதி கூட்டணி சனிக்கிழமை (நவம்பர் 23) வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் 235 இடஙகளைக் கைப்பற்றியுள்ளது.

    இவற்றில் பாஜக 132 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், என்சிபி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    இந்த அமோக வெற்றி, ஆறு தசாப்தங்களில் முதல்முறையாக மகாராஷ்டிர சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் ஆக்கியுள்ளது.

    கடைசியாக 1962 மற்றும் 1967 தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக யாரும் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    எதிர்க்கட்சித் தலைவர் 

    எதிர்க்கட்சித் தலைவருக்கான விதி

    மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் சம்பளம் மற்றும் படிகள் சட்டத்தின் விதிகளின்படி, எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க ஒரு கட்சி மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 10% இடங்களை கொண்டிருக்க வேண்டும்.

    ஆனால், எந்த எதிர்க்கட்சியும் தகுதி பெறவில்லை.

    எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணியின் ஒரு பகுதியான சிவசேனா (யுபிடி) வெறும் 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    காங்கிரஸ் 16 இடங்களிலும், சரத் பவாரின் என்சிபி (எஸ்பி) 10 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    முன்னாள் சட்டமன்ற முதன்மைச் செயலாளர் அனந்த் கல்சே, "எதிர்க்கட்சிக்கு 28 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவரை பரிந்துரைக்க முடியும்" என்று கூறினார்.

    விதி தெளிவுபடுத்தல்

    எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டாக கோர முடியுமா? 

    காங்கிரஸ், சிவசேனா (யுபிடி), என்சிபி (எஸ்பி) ஆகிய கட்சிகளுக்கு தனிப்பட்ட முறையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.

    அவர்களின் ஒருங்கிணைந்த பலம் தேவையான எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தாலும், தனிப்பட்ட கட்சிகள் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் உரிமை கோர முடியும் என்று விதிகள் கூறுகின்றன.

    கடந்த காலங்களில் காங்கிரஸ் எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லாதபோது மகத்தான வெற்றிகள் பெற்ற சமயத்திலும், இதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் பதவி கொடுக்கப்பட முடியாத சூழல் இருந்ததைப் போல் இது உள்ளது.

    தற்போதைய நிலையில், மகாராஷ்டிரா மட்டுமல்லாது, இதே காரணங்களால் ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அரசியல் பின்னடைவு

    தேர்தல் முடிவுகள் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது

    இந்த தேர்தல் முடிவுகள் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரின் கட்சிகளில் பிளவுக்குப் பிறகு அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

    ஜூன் 2022 இல் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான ஏக்நாத் ஷிண்டேவின் கிளர்ச்சி சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தியது.

    அதே நேரத்தில் அஜித் பவார் 2023 இல் ஆளும் கூட்டணியில் சேர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற பாஜக தலைவர்கள் இந்த முடிவுகள் வரலாற்று வெற்றி என்று கூறியுள்ளனர்.

    இதற்கிடையே, பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவருமே வலுவான போட்டியாளர்களாக இருப்பதால், முதல்வர் பதவிக்கு யார் அமர்வது என்பது குறித்த பேச்சுக்கள் தீவிரமாக உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    தேர்தல் முடிவு
    எதிர்க்கட்சிகள்
    இந்தியா

    சமீபத்திய

    நானியின் 'HIT 3' Netflix இல் வெளியாகிறது, இந்த தேதியில்! நெட்ஃபிலிக்ஸ்
    எல்லைக்கு அருகிலுள்ள விமான நிலையங்களில் செயல்படும் விமானங்களுக்கு கட்டாய பாதுகாப்பு உத்தரவுகளை வழங்கிய DGCA விமான நிலையம்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியை அறிவித்த பிசிசிஐ  பிசிசிஐ
    இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமனம்: விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்  ஷுப்மன் கில்

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிரா மருத்துவமனையில் நிர்வாணமாக சுற்றித் திரிந்த மருத்துவர் சிசிடிவியில் சிக்கினார்    இந்தியா
    மகாராஷ்டிரா எதிர்க்கட்சி சீட் ஒப்பந்தம் முடிவானது: தாக்கரேவின் கட்சி 21 இடங்களில் போட்டி இந்தியா
    மகாராஷ்டிரா பேரணியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார் நிதின் கட்காரி
    போர்ஷே விபத்தில் 2 பேரை கொன்ற புனே சிறுவனின் தந்தை கைது  காவல்துறை

    தேர்தல் முடிவு

    பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கூட்டணி அமைக்க வாய்ப்பு  பாகிஸ்தான்
    ஜம்மு காஷ்மீரில் தனியாகப் போட்டியிட ஃபரூக் அப்துல்லாவின் கட்சி முடிவு  ஜம்மு காஷ்மீர்
    கூட்டணி குறித்து இரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்: ம.நீ.ம கட்சி தலைவர் அறிவிப்பு கமல்ஹாசன்
    ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு: மார்ச் 22-ஆம் தேதி துவக்கம் ஐபிஎல்

    எதிர்க்கட்சிகள்

    ஹேக்கிங் விவகாரம்: ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக தகவல்  நாடாளுமன்றம்
    எதிர்கட்சியினரின் ஐபோன் ஹேக்: ஆய்வு செய்ய மத்திய அரசின் CERT-IN களமிறங்குகிறது  ஐபோன்
    'தொகுதி பங்கீட்டால் INDIA கூட்டணி கட்சிகளுக்குள் சலனம்': உமர் அப்துல்லா கவலை  ஜம்மு காஷ்மீர்
    ஜனவரி 12ம்.,தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் - இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு அறிவிப்பு  நாடாளுமன்றம்

    இந்தியா

    ஐரோப்பா சந்தையில் இந்த மாத இறுதியில் அறிமுகமாகிறது அமுல் பால் நிறுவனம்; வெளியானது அறிவிப்பு பால்
    டெலிவரி பார்ட்னர்களின் நிதி மேலாண்மைக்காக ஜோமோட்டோ சூப்பர் அறிவிப்பு ஜோமொடோ
    எஞ்சின் குறைபாடு காரணமாக ஹோண்டா கோல்டு விங் பைக் இந்தியாவில் திரும்ப பெறப்படுகிறது ஹோண்டா
    2028க்குள் இந்தியாவில் 2.7 மில்லியன் தொழில்நுட்ப வேலைகளை ஏஐ உருவாக்குமாம்! செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025