NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகாராஷ்டிரா நிலச்சரிவு: 78 பேர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் நிறுத்தம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 78 பேர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் நிறுத்தம்
    கனமழையால், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் மீட்பு பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 78 பேர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் நிறுத்தம்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 23, 2023
    06:53 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி குக்கிராமத்தில் நான்கு நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் இன்றோடு நிறுத்தப்பட்டன.

    78 பேரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மீட்பு அதிகாரிகள், மாநில அரசு மற்றும் கிராம மக்களுக்கு இடையே நடந்த கூட்டத்திற்குப் பிறகு மீட்புப் பணிகளை நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    நேற்று மீட்கப்பட்ட கடைசி உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், இதற்கு மேல் மீட்பு பணிகளை தொடர்ந்தும் எந்த பயனும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூலி

    இர்சல்வாடி மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என அறிவித்த மாநில அரசு 

    அடையாளம் காணப்படாத உடல்கள் மற்றும் விலங்குகள் அழுகி கொண்டே இருப்பதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது.

    மும்பையில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள காலாபூர் தாலுகாவுக்கு உட்பட்ட மலைச் சரிவில் அமைந்துள்ள இந்த பழங்குடியின கிராமத்தில் கடந்த புதன்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.

    இந்த கிராமம் மலையின் உச்சியில் அமைந்துள்ளதால், மீட்புக் குழுவினர் அந்தப் பகுதியை அடைய மணிக்கணக்கில் மலையேற வேண்டியிருந்தது.

    அப்பகுதியில் பெய்த கனமழையால், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் மீட்பு பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 27ஆக உள்ளது. இருப்பினும், 78-பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இதற்கிடையில், நிலச்சரிவில் வீடுகளை இழந்த இர்சல்வாடி மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    நிலச்சரிவு

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி நிதின் கட்காரி
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா

    நிலச்சரிவு

    ஹிமாச்சல் நிலச்சரிவு: 15-கிமீ டிராபிக் ஜாமால் சுற்றுலா பயணிகள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை  உத்தரகாண்ட்
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை  மகாராஷ்டிரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025