NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு
    கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்

    கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 20, 2024
    12:43 pm

    செய்தி முன்னோட்டம்

    கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, தமிழக அரசு சிபிசிஐடி-க்கு விசாரணையை ஒப்படைக்க உத்தரவிட்டது.

    ஆனால், இந்த முடிவை எதிர்க்கட்சிகள் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்குகளை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற பெஞ்ச் இன்று தங்கள் தீர்ப்பை வழங்கினார்கள்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    தி.மு.க அரசுக்கு அதிர்ச்சி.!

    கள்ளக்குறிச்சி விஷச்சாராய விற்பனை மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றக்கோரி எதிர்க்கட்சிகள் தொடுத்த வழக்கில், விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு#CBI | #DMK | #MKStalin | #Kallakurichi | #MadrasHC |… pic.twitter.com/mdp7BahUGG

    — Tamil Janam (@TamilJanamNews) November 20, 2024

    தீர்ப்பு 

    வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவு

    உயர் நீதிமன்ற நீதிபதிகள் கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றி விசாரிக்க உத்தரவிட்டதுடன், இந்த சம்பவம் உள்ளூர் காவல்துறையினரின் துணையின்றி, அவர்களுக்கு தெரியாமல் நடைபெற முடியாது என்பதையும் குறிப்பிட்டனர்.

    இந்த விவகாரத்தில் தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர். வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ-க்கு ஒப்படைக்கவும், தமிழக காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு, எதிர்க்கட்சியினர், "இந்த மரணங்களுக்கு காரணமான அரசியல் பிரமுகர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த தீர்ப்பின் மூலம் அது நடப்பதாக நம்புகிறோம்," என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கள்ளக்குறிச்சி
    சென்னை உயர் நீதிமன்றம்
    சிபிஐ

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 29ஆக உயர்வு இந்தியா
    "அரசின் அலட்சியத்தை காட்டுகிறது": கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகள் குறித்து TVK தலைவர் விஜய் கண்டனம் தமிழக வெற்றி கழகம்
    கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்: சட்டசபைக்குள் எதிர்க்கட்சியினர் கடும் அமளி  சட்டப்பேரவை
    கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 58 -ஆக உயர்வு; மேலும் இருவரை கைது செய்த சிபிசிஐடி கைது

    சென்னை உயர் நீதிமன்றம்

    திரிஷாவுக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்பதிய அனுமதி கோரிய வழக்கு: நடிகர் மன்சூர் அலிக்கானுக்கு அபராதம் மன்சூர் அலிகான்
    உளவியல் பரிசோதனை வழக்கு: லோகேஷ் கனகராஜிற்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்  லோகேஷ் கனகராஜ்
    அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை - உச்சநீதிமன்றம்  செந்தில் பாலாஜி
    அதிமுக சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வம்

    சிபிஐ

    மார்க் ஆண்டனி பட விவகாரம்: மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர் விஷால்
    முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் 2 ஆண்டு சிறை தண்டனையினை ரத்து செய்த உயர் நீதிமன்றம்  சென்னை உயர் நீதிமன்றம்
    'உதயநிதி ஸ்டாலின் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது' - உச்சநீதிமன்றம்  அறநிலையத்துறை
    தெலுங்கானாவின் முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி; விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்கின்றனர் தெலுங்கானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025