சட்டம் பேசுவோம்: திருமண-பலாத்காரத்திற்கு எதிராக இந்தியாவில் சட்டங்கள் இல்லையா?
செய்தி முன்னோட்டம்
சட்டம் பேசுவோம்: கணவன் மனைவியாக இருந்தாலும் ஒருவரது விருப்பத்திற்கு மாறாக அவரை உடலுறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்துவது திருமண-பலாத்காரம் என்று அழைக்கப்படுகிறது.
பலாத்காரம் என்பது இந்தியாவில் மிகப்பெரும் குற்றமாகும். புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் குற்றவியல் சட்டங்களின்படி, பலாத்கார குற்றத்திற்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.
ஆனால், இந்தியாவில் திருமண-பலாத்காரம் இன்றுவரை குற்றமாக்கப்படவில்லை.
சில நாட்களுக்கு முன், மத்திய அரசு முன்மொழிந்த புதிய குற்றவியல் மசோதாவில் கூட திருமண பலாத்காரத்திற்கு எதிராக எந்த விதியும் அறிமுகப்படுத்தப்படவில்லை.
"பதினெட்டு வயதை தாண்டிய தன் மனைவியுடன் ஒரு ஆண் உடலுறவு கொள்வது பலாத்காரம் அல்ல" என்று இந்த புதிய குற்றவியல் மசோதா கூறுகிறது.
ஜட்ஜ்
திருமணம் என்ற பெயரில் பலாத்காரம் செய்வதற்கு சட்டம் ஒத்துழைக்கிறதா?
இதற்கு எதிரான சட்டங்கள் எதுவும் இந்தியாவில் இல்லாததால், திருமணம் என்ற பெயரில் பலாத்காரம் செய்வதற்கு சட்டம் ஒத்துழைப்பதாக சில சமூக ஆர்வலர்கள் பல வருடங்களாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
திருமண-பலாத்காரத்திற்கு எதிராக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் பல வழக்குகள் இதுவரை போடப்பட்டுள்ளன.
ஆனால், அதற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு, திருமண-பலாத்காரத்திற்கு எதிரான சில மனுக்களை ஏற்றுக்கொள்ள இருப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
ஆனால், அடுத்தகட்ட நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை.
இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் பெரும்பாலும் பிரிட்டன் போன்ற பிற நாடுகளை தழுவி எழுதப்பட்டதாகும்.
அப்படி இருக்கையில், பிரிட்டனில் 1991ஆம் ஆண்டிலேயே திருமண பலாத்காரம் குற்றமாக்கப்பட்டுவிட்டது.
டுவெக்ஜ்க
உலக நாடுகளும் திருமண பலாத்காரத்திற்கு எதிரான சட்டங்களும்
1981ஆம் ஆண்திலிருந்தே ஆஸ்திரேலியா திருமண ரீதியான பலாத்காரத்தை குற்றமாக்கும் சட்டங்களை இயற்றத் தொடங்கியது.
1983இல் கனடாவும், 1993இல் தென்னாப்பிரிக்காவும் திருமண பலாத்காரத்தை குற்றமாக்கியது.
2019ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகெங்கிலும் உள்ள சுமார் 150 நாடுகளில் திருமண பலாத்காரம் என்பது குற்றமாகும்.
அந்த 150 நாடுகளுள் 77 நாடுகளில், குறியிடப்பட்ட சட்டங்கள் மூலம் திருமண பலாத்காரம் குற்றமாக்கப்பட்டது.
ஆனால், இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை.
அமெரிக்காவை போலல்லாமல், கருக்கலைப்பு, ஆயுத கட்டுப்பாடு போன்ற முக்கியமான விஷயங்களில் மிக பலமான சட்டங்களை கொண்ட நாடு இந்தியாவாகும்.
ஆனால், இந்தியாவில் திருமண பலாத்காரத்தை தடுக்க ஒரு சட்டம் கூட இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
திலீஜ்
திருமண-பலாத்காரம் குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?
டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த திருமண-பலாத்கார வழக்கின் போது, ஒரு பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது.
அந்த பிரமாணப் பத்திரத்தில், திருமண பலாத்காரத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரி இருந்தது.
திருமண-பலாத்காரத்திற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டால், அதை ஒரு பெண் தவறாக பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என்று மத்திய அரசு வாதிட்டது.
அதனால், ஆண்களைப் பாதுகாக்கவும், திருமண உறவை பாதுகாக்கவும் இப்படிப்பட்ட சட்டங்கள் இயற்றப்பட கூடாது என்றும் மத்திய அரசு கூறி இருந்தது.
எனினும், இந்த விவகாரத்தில் விரிவான விவாதம் தேவை என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
உகிபிட்வ்
திருமணமான பெண்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு
இந்நிலையில், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த இந்த பிரச்சனை குறித்த பொதுநல வழக்குகளை ஒரு மாதத்திற்கு முன், உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இந்த மேல் முறையீடுகளில் முக்கியமான மூன்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.அவை:-
1. திருமண-பலாத்காரத்திற்கு எதிரான சட்டங்கள் இந்தியாவில் இல்லை என்பது திருமணமான பெண்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு இல்லையா?
2. திருமணமான பெண்களின் விருப்பத்திற்கு எதிராக ஒரு கணவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சட்டம் கூறுகிறது. அப்படியென்றால், ஒரு திருமண பந்தத்தில் ஒரு ஆணுக்கு பெண் சமமானவள் இல்லையா?
3. இப்படி ஒரு சட்டம் இல்லாதது, ஒரு மனைவியின் தனியுரிமை, சுய வெளிப்பாட்டு உரிமை, கண்ணியமான வாழ்க்கைக்கான உரிமை மற்றும் அவரது தனிப்பட்ட சுயாட்சிக்கான உரிமை ஆகியவற்றை மீறுகிறதா இல்லையா?