NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு
    பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

    பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2023
    11:46 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கோயம்பேடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும்,

    தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களின் வசதிகளை கருத்தில் கொண்டும் வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டது.

    ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பில் 88.52 ஏக்கரில் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன தொழில்நுட்பம் கொண்டு இந்த பேருந்து நிலையம் கட்டப்படுகிறது என்று கூறப்பட்டது.

    கட்டுமான பணிகள் நிறைவடையும் தருணத்தில் உள்ள நிலையில், காவல் நிலையம், பூங்கா உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

    பேருந்து

    புதிய பேருந்து நிலையத்தினை முதல்வர் திறந்து வைப்பார் என்று தகவல் 

    கடந்த 12ம்.,தேதி வண்டலூரிலிருந்து 100 அரசுப்பேருந்துகளை புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் அனுப்பி, ஊரப்பாக்கம் வழியே வெளியேறும் வண்ணம் சோதனையோட்டம் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், இன்று(டிச.,25)கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர் பாபு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

    அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, "வரும் பொங்கல் பண்டிகைக்குள் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும், முதல்வர்.மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைப்பார்"என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், "இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் தினந்தோறும் 840-ஆம்னி பேருந்துகளும், 2,310-பேருந்துகளும் இயக்கப்படும்" என்றும்,

    "இப்பேருந்து நிலைய வளாகத்திற்குள் தனி காவல்நிலையம், மருந்துக்கடைகள், தீயணைப்புத்துறை வண்டிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஓய்வெடுக்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகள் அமையப்பெறும்" என்றும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பொங்கல்
    சென்னை
    கோயம்பேடு
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    பொங்கல்

    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல் திருநாள்
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவக்கம் - சில நிமிடங்களில் விற்றுப்போன பயணச்சீட்டுக்கள் ரயில்கள்
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா

    சென்னை

    சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு - இன்றைய நிலவரம்  கோயம்பேடு
    ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம்  முதலீடு
    கடலில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரம் குறித்து சிபிசிஎல் நிறுவனம் விளக்கம்  வெள்ளம்
    'கண்ணகி' முதல் 'பைட் கிளப்' வரை- தமிழில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு திரைப்பட வெளியீடு

    கோயம்பேடு

    கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் உயரும் தக்காளி விலை  தமிழக அரசு
    தீபாவளிக்கு மறுநாள், நவ.,13ஆம் தேதி, கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது  தீபாவளி 2023
    வரத்து குறைந்த சின்ன வெங்காயம்; கிலோ 110க்கு விற்பனை தமிழ்நாடு
    மிக்ஜாம் புயலும் தத்தளிக்கும் சென்னையும்; காய்கறிகளின் விலை உயர்வு; ATM மையங்கள் முடக்கம் சென்னை

    மு.க ஸ்டாலின்

    Explained- தமிழ்நாட்டில் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக என்ன சர்ச்சை? திருவண்ணாமலை
    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் U-வடிவ மேம்பாலம் திறப்பு தமிழ்நாடு
    இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - கடந்து வந்த பாதை உதயநிதி ஸ்டாலின்
    தெலுங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிப்படைந்த 8 லட்சம் குழந்தைகள் தெலுங்கானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025