Page Loader
கள்ளக்கடல் அபாயம்: தமிழகம் மற்றும் கேரள கடற்கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை
கள்ளக்கடல் அபாயம்: தமிழகம் மற்றும் கேரள கடற்கரையோர பகுதிகளுக்கு அலெர்ட்

கள்ளக்கடல் அபாயம்: தமிழகம் மற்றும் கேரள கடற்கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Jan 14, 2025
05:43 pm

செய்தி முன்னோட்டம்

கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் கள்ளக்கடல் நிகழ்வு குறித்து அதிக உஷார் நிலையில் உள்ளன. இது ஜனவரி 15 இரவு திடீர் கடல் சீற்றம் மூலம் கரடுமுரடான அலைகளை ஏற்படுத்தும் என கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS) தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு இரவு 11:30 மணி வரை 0.5 முதல் 1.0 மீட்டர் வரை அலைகளை உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இதனால் கடல் சீற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது. கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (கேஎஸ்டிஎம்ஏ) பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு வலியுறுத்தியுள்ளது.

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலோர மக்கள் சிறிய கப்பல்கள் அல்லது நாட்டுப்படகுகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீன்பிடி கப்பல்கள் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட வேண்டும், மேலும் மறு அறிவிப்பு வரும் வரை கடற்கரைகளில் சுற்றுலா நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேஎஸ்டிஎம்ஏ கடலோர அரிப்பு அபாயம் இருக்கலாம் என்பதால எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துள்ளது.

கள்ளக்கடல்

கள்ளக்கடல் என்றால் என்ன?

கள்ளக்கடல், அதாவது திடீரென திருடன் போல் வரும் கடல் என்பது இந்த கணிக்க முடியாத நிகழ்வை பொருத்தமாக விவரிக்கிறது. தெற்கு இந்தியப் பெருங்கடலில் வீசும் பலத்த காற்றினால் கள்ளக்கடல் வீக்கங்கள் ஏற்படுகின்றன. இவை தெளிவான அறிகுறிகள் அல்லது எச்சரிக்கை இல்லாமல் திடீரென எழுகின்றன என்று INCOIS விளக்குகிறது. அச்சுறுத்தல் குறையும் வரை பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.