NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிலமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிலமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி
    கர்நாடக முதல்வர் சித்தராமையா

    நிலமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 17, 2024
    01:14 pm

    செய்தி முன்னோட்டம்

    மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

    டி.ஜே.ஆபிரகாம், பிரதீப் மற்றும் சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோரின் மனுக்களை அடுத்து வழக்கு தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    முடாவின் நில ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த முறைகேடுகளால் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி சித்தராமையா ஆதாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    முதல்வர் மீது வழக்கு தொடர்வதற்கான அனுமதி குறித்த தகவல் கிடைத்ததை கர்நாடக முதல்வர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

    இதற்கிடையில், முதலமைச்சர் மீது வழக்குத் தொடரக் கோரி புகார் அளித்தவர்களில் ஒருவரான டி ஜே ஆபிரகாமை ஆளுநர் தாவர் சந்த் கெலாட் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) ராஜ்பவனுக்கு வரவழைத்துள்ளார்.

    மோசடி

    2021ல் பார்வதியின் 3 ஏக்கர் நிலத்தை முடா வாங்கியது

    2021ஆம் ஆண்டில், மைசூரில் உள்ள கேசரே கிராமத்தில் பார்வதியின் 3 ஏக்கர் நிலத்தை முடா, வளர்ச்சிக்காக கையகப்படுத்தியது. அதற்கு ஈடாக தெற்கு மைசூரின் விஜயநகர் பகுதியில் அவருக்கு மனைகள் ஒதுக்கப்பட்டன.

    அவரது கேசரே நிலத்தை விட விஜயநகர் மனைகள் விலை அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 சட்டமன்றத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், அந்த நிலத்தின் தகவலை சித்தராமையா வெளியிடத் தவறிவிட்டார் என்று ஆபிரகாம் தனது புகாரில் குற்றம் சாட்டினார்.

    முன்னதாக, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க ஜூலை 26 அன்று, கவர்னர் கெலாட் சித்தராமையாவிற்கு கடிதம் அனுப்பிய நிலையில், அவர் தனது அரசியலமைப்பு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டியதோடு, தன் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    இந்தியா
    வழக்கு
    சித்தராமையா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கர்நாடகா

    கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சுமிட்டாய் செய்ய பயன்படுத்தப்படும் இரசாயனத்துக்கு தடை விதித்தது கர்நாடக அரசு சுகாதாரத் துறை
    அரசியலில் இறங்கும் மற்றுமொரு ராஜ வம்சம்: கர்நாடகாவில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் யதுவீர் வாடியார் அரசியல் நிகழ்வு
    கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது POCSO வழக்கு பதிவு முதல் அமைச்சர்
    IPLஇல் பந்தயம் கட்டி ரூ.1 கோடியை இழந்த கணவன்: மனைவி தற்கொலை  இந்தியா

    இந்தியா

    அசாதாரணமான சூழ்நிலை காரணமாக வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடப்பட்டன பங்களாதேஷ்
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 675 பில்லியன் டாலராக உயர்வு ரிசர்வ் வங்கி
    மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் வெற்றி; பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம் பாரிஸ் ஒலிம்பிக்ஸ்
    உலக சிங்க தினம் 2024: அழிவின் விளிம்பில் உள்ள காட்டு ராஜாக்களை மீட்பதற்கான முன்னெடுப்பு சிறப்பு செய்தி

    வழக்கு

    நடிகைகள் திரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்: மன்சூர் அலிகான் மன்சூர் அலிகான்
    கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை கொலை
    திரிஷாவிடம் ₹1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு- மன்சூர் அலிகான் வழக்கறிஞரிடம் நீதிபதி காட்டம் மன்சூர் அலிகான்
    க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது பாலியல் வன்கொடுமை

    சித்தராமையா

     5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆயத்தமாகும் கர்நாடக அரசு  இந்தியா
    கர்நாடகாவில் மாடுகளை வைத்து போராட்டம் நடத்தும் பாஜகவினர்: காரணம் என்ன  இந்தியா
    அவதூறு வழக்கு: ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு சம்மன்  இந்தியா
    பாஜகவின் மதமாற்ற சட்டம் ரத்து: கர்நாடக அரசு அதிரடி  கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025