NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸில் இணைந்தார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸில் இணைந்தார்
    காங்கிரஸ் கட்சியில் இணைந்ததும், கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்த ஷர்மிளா

    ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸில் இணைந்தார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 04, 2024
    01:09 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்.எஸ்.ஷர்மிளா, இன்று காலை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    எக்ஸ்-இல் பகிரப்பட்ட வீடியோக்களில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிகிறது.

    இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு வந்த ஷர்மிளாவிடம் நிருபர்கள்,காங்கிரஸில் சேருகிறீர்களா என்று கேட்டபோது, ​​அவர் அதை ஆமோதித்தார்.

    முன்னதாக ஐதராபாத்தில் செவ்வாயன்று தனது கட்சிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிறகு, ஷர்மிளா, மற்றும் கட்சியின் தலைவர்களும், AICC தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் உயர்மட்டத் தலைமையைச் சந்தித்து, டெல்லியில் "முக்கியமான" ஒரு அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸில் இணைந்தார்

    #அரசியல்Post | காங்கிரஸில் இணைந்தார் ஒய்.எஸ். சர்மிளா!#SunNews | #YSSharmila | @INCIndia pic.twitter.com/7bYjZSYV4G

    — Sun News (@sunnewstamil) January 4, 2024

    card 2

    தேர்தலில் காங்கிரஸிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ஷர்மிளா 

    ஷர்மிளா, பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும் ஆவார்.

    தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, ​​கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ்-ன் ஊழல் மற்றும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக ஷர்மிளா அறிவித்தார்.

    இந்த சூழலில் தான் அவர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.

    அதோடு அவர், தனது ஒய்எஸ்ஆர் தெலுங்கானா காங்கிரஸை காங்கிரஸுடன் இணைப்பதாகவும் அறிவித்தார். மேலும் தனக்கு வழங்கப்படும் எந்தப் பொறுப்பையும் நிறைவேற்றுவேன் என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கானா
    காங்கிரஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    தெலுங்கானா

    நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: 3 தென் மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்' கர்நாடகா
    தெலுங்கானா கனமழை எதிரொலி - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை  மழை
    தெலுங்கானா : முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதி கவிஞர் கதர் காலமானார் ஹைதராபாத்
    பொதுமக்கள் வங்கி கணக்குகளில் திடீர் டெபாசிட் - அதிர்ச்சியில் வங்கி ஊழியர்கள்  வங்கிக் கணக்கு

    காங்கிரஸ்

    தெலுங்கானாவில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு: நேருக்கு நேர் மோதுகின்றன பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக  தெலுங்கானா
    தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: ராஜஸ்தானை கைப்பற்றும் பாஜக, சத்தீஸ்கர், தெலுங்கானாவை வசமாக்கும் காங்கிரஸ் தெலுங்கானா
    தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை  தேர்தல்
    டிசம்பர் 6ம் தேதி நடக்கிறது 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம் டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025