NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி குண்டுவெடிப்பு: இந்தியாவில் உள்ள தனது மக்களுக்கு இஸ்ரேல் அறிவுரை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி குண்டுவெடிப்பு: இந்தியாவில் உள்ள தனது மக்களுக்கு இஸ்ரேல் அறிவுரை 

    டெல்லி குண்டுவெடிப்பு: இந்தியாவில் உள்ள தனது மக்களுக்கு இஸ்ரேல் அறிவுரை 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 27, 2023
    08:58 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்றுமாலை டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரக கட்டிடத்திற்கு அருகே குண்டுவெடிப்பு நடந்தது.

    இது குறித்து பேசிய இஸ்ரேல் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், "தூதரகத்திற்கு அருகாமையில் மாலை 5:08 அளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. டெல்லி காவல்துறை மற்றும் பாதுகாப்புக் குழு இன்னும் நிலைமையை ஆராய்ந்து வருகிறது" என்று நேற்று கூறியிருந்தார்.

    புதுடெல்லியில் உள்ள சாணக்கியபுரி தூதரக வளாகத்தில் இருக்கும் இஸ்ரேலிய தூதரகம் அருகே நேற்று மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்தியாவில் உள்ள தனது குடிமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

    டக்ஒஜ்

    இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுரை 

    இந்த குண்டுவெடிப்பு ஒரு 'பயங்கரவாத தாக்குதலாக' இருக்கலாம் என்றும் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூறியுள்ளது.

    மேலும், இஸ்ரேலிய நாட்டவர்கள் நெரிசலான இடங்கள்(மால்கள், சந்தைகள்) மற்றும் மேற்கத்தியர்கள்/யூதர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு சேவை செய்யும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இஸ்ரேலிய மக்கள் பொது இடங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

    இஸ்ரேலிய சின்னங்களை வெளிப்படையாகக் காண்பிப்பதைத் தவிர்க்கவும், பாதுகாப்பற்ற பெரிய அளவிலான நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்கவும், இஸ்ரேலிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லியின் தூதரகப் பகுதியான சாணக்யபுரி பகுதியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்குப் பின்னால் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து காவல்துறை உஷார்படுத்தப்பட்டது.

    இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இந்தியா
    டெல்லி
    குண்டுவெடிப்பு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இஸ்ரேல்

    30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து 12 பிணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்க, பேச்சுவார்த்தைகள் தீவிரம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானார் அமெரிக்கா
    இஸ்ரேல் ஹமாஸ் போர்- இறுதி நாள் போர் நிறுத்தத்தில் 16 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இந்தியா

    இந்தியாவின் கடன் சுமை குறித்த IMF-ன் கணிப்பு, ஏற்காத இந்திய அரசு பொருளாதாரம்
    இந்தாண்டில் அதிகபட்சமாக ஒரேநாளில் ரூ.31,748க்கு ஸ்விகி ஆர்டர் செய்த சென்னை நபர் ஸ்விக்கி
    YearRoundup 2023- இந்த ஆண்டு இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் சரித்திரம் படைத்த 10 பெண்கள் இந்திய ராணுவம்
    சென்னை தயாரிப்பு தொழிற்சாலை விற்பனை முடிவில் இருந்து பின்வாங்கிய ஃபோர்டு? ஆட்டோமொபைல்

    டெல்லி

    சென்னை நகை கடைகளில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை  சென்னை
    காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்: டெல்லி அரசு எச்சரிக்கை
    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகள் முடக்கம் இந்தியா
    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து  கேரளா

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025