
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கை படகுகளை கைப்பற்றியது இந்திய கடற்படை
செய்தி முன்னோட்டம்
ஒரு குறிப்பிடத்தக்க போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில், இந்திய கடற்படையினர் அரபிக்கடலில் இலங்கைக் கொடியுடன் சென்ற மீன்பிடிக் கப்பல்களை இடைமறித்து, தோராயமாக 500 கிலோ கிரிஸ்டல் மெத்தை கைப்பற்றினர்.
நவம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையானது, பிராந்திய பாதுகாப்பு சவால்களைச் சமாளிப்பதில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கடல்சார் ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது.
முன்னதாக, இந்த போதைப்பொருள் கடத்தல் குறித்து இலங்கை கடற்படை வழங்கிய ரகசிய தகவல்களின் அடிப்படையில், இந்திய கடற்படை நீண்ட தூர கடல் ரோந்து விமானம் மற்றும் தொலைதூர விமானம் மூலம் வான்வழி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
குருகிராமில் உள்ள தகவல் இணைவு மையத்தின் (இந்தியப் பெருங்கடல் பகுதி) தரவு இந்த நடவடிக்கைக்கு மேலும் உதவியது.
போதைப்பொருள் கடத்தல்
போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு
இந்திய கடற்படையின் ஒரு போர்க்கப்பல் தலைமையில் அரபிக்கடலில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட இரண்டு மீன்பிடி படகுகள், 500 கிலோ போதைப்பொருள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள், கப்பல்கள் மற்றும் கடத்தல்காரர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இரு நாடுகளின் நெருங்கிய உறவுகளையும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் இந்த நடவடிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இதற்கிடையே, சமீபத்தில் அந்தமான் கடலில் 6,000 கிலோ மதிப்பிலான மெத்தபோட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மியான்மர் கொடியுடன் சென்ற படகை அந்தமான் காவல்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
இந்திய கடற்படை அறிக்கை
Narcotics Seizure - Combined Operation b/n #IndianNavy & @srilanka_navy.
— SpokespersonNavy (@indiannavy) November 29, 2024
Based on information received from #SrilankaNavy regarding probable narcotics smuggling by Sri Lankan flagged fishing vessels, the @indiannavy swiftly responded through a coordinated operation to localise &… pic.twitter.com/dkpzNQonTF