NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கப்பல்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அரபிக்கடலில் கண்காணிப்பை அதிகரித்தது இந்திய கடற்படை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கப்பல்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அரபிக்கடலில் கண்காணிப்பை அதிகரித்தது இந்திய கடற்படை

    கப்பல்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அரபிக்கடலில் கண்காணிப்பை அதிகரித்தது இந்திய கடற்படை

    எழுதியவர் Sindhuja SM
    Dec 31, 2023
    02:29 pm

    செய்தி முன்னோட்டம்

    அரபிக்கடல் பகுதியில் இயங்கும் வணிக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்திய கடற்படை மத்திய மற்றும் வட அரேபிய கடலில் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்தியுள்ளது.

    கடந்த சில வாரங்களாக செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மத்திய வட அரேபிய கடல் வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போருக்கு மத்தியில், ஏமன் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மத்திய வட அரேபிய கடல் ஆகிய பகுதிகளை கடந்து செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து கடந்த வாரம் தாக்குதல் நடத்தினர்.

    ஜஃபிசினெவ்க்

    இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் அதிகரிக்கும் தாக்குதல்கள் 

    கடந்த வாரம், இந்தியக் கடற்கரையில் இருந்து சுமார் 700 கடல் மைல் தொலைவில் MV Ruen கப்பலில் நடந்த திருட்டு சம்பவமும், குஜராத்தின் போர்பந்தருக்கு தென்மேற்கே சுமார் 220 கடல் மைல் தொலைவில் MV Chem Pluto கப்பல் மீது நடந்த ட்ரோன் தாக்குதலும் இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு(EEZ) மிக அருகில் நடந்த தாக்குதல் சம்பவங்கள் ஆகும்.

    இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு(EEZ) மிக அருகில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் இந்திய கடற்படை மத்திய மற்றும் வட அரேபிய கடலில் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்தியுள்ளது.

    போர் விமானங்கள் மற்றும் போர் கப்பலைகளின் நடமாட்டதை இந்திய பெருங்கக்கடலில் அதிகரித்ததன் மூலம் இந்திய கடற்படை கண்காணிப்பை மேம்படுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கடற்படை

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    இந்தியா

    300 இந்தியர்கள் சென்ற விமானத்தை தடுத்து நிறுத்திய பிரான்ஸ்: 2 பேர் கைது  பிரான்ஸ்
    ஜனவரி 6இல் ஆதித்யா-எல்1 செயற்கைகோள் லக்ராஞ்சியன் புள்ளியை அடையும் : இஸ்ரோ தலைவர் ஆதித்யா L1
    இந்தியா குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தவறு; மத்திய அரசு பதிலடி மத்திய அரசு
    இந்தியாவில் மேலும் 752 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 4 பேர் பலி  கொரோனா

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025