NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி
    மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சிபெறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்

    உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 27, 2023
    08:39 am

    செய்தி முன்னோட்டம்

    எதிர்வரும் தேர்தலில், ஆளும் பாஜக கட்சி 3-வது முறை ஆட்சி அமைக்கப்பெற்றால், இந்தியாவின் பொருளாதார நிலை மேலும் மேம்படும் என்றும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சிபெறும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

    G20 மாநாட்டிற்காக, டெல்லி பிரகதி மைதானத்தில், மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ள சர்வதேச கண்காட்சி, மாநாட்டு மைய (ஐஇசிசி) வளாகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய மோடி, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து பேசிய பிரதமர், "மத்தியில் பாஜக தலைமையிலான அரசு அமைந்த பிறகு நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் பெருகி வருகின்றன. இப்போது உலகின் உயரமான ரயில் பாலம் இந்தியாவில் உள்ளது. இதுபோல உலகிலேயே உயரமான மலைப்பகுதியில் நீளமான சுரங்கப்பாதையும் இந்தியாவில் உள்ளது".

    card 2

    எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் 

    அந்த விழாவில் மேலும் பேசிய மோடி, "அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 3-வது முறையாக பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும். எனது தலைமையிலான 3-வது ஆட்சியின்போது இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் வேகமாக இருக்கும். எனது முதல் ஆட்சியில் உலக அளவில் இந்திய பொருளாதாரம் 10-வது இடத்தில் இருந்தது. 2-வது ஆட்சியில் 5-ம் இடத்துக்குமுன்னேறி உள்ளது. இந்த வரிசையில், 3-வது ஆட்சியில் உலகின்3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்," என பேசினார்.

    இதனிடையே, நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை, நாடாளுமன்ற சபாநாயகர் ஏற்று கொண்டுள்ளார்.

    தொடர்ந்து இது குறித்த விவாதத்திற்கான தேதியை அவர் விரைவில் அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர்
    பிரதமர் மோடி
    பொருளாதாரம்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்

    பிரதமர்

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர் உலக செய்திகள்
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா

    பிரதமர் மோடி

    '6 முஸ்லீம் நாடுகளில் குண்டு வீசப்பட்டது': பராக் ஒபாமாவிற்கு நிர்மலா சீதாராமன் பதிலடி இந்தியா
    உலகளவில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி - 7ம் இடத்தினை பிடித்த அதிமுக  அதிமுக
    பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு நெருக்கடி: வெள்ளை மாளிகை கண்டனம் இந்தியா
    முத்தலாக் நடைமுறைக்கு முடிவுகட்ட வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு  இந்தியா

    பொருளாதாரம்

    மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி இந்தியா
    "மூன்றில் இரண்டு பங்கு 2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன" -ரிசர்வ் வங்கி ஆளுநர் ரிசர்வ் வங்கி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025