NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காலிஸ்தான் ஆதரவு அணிவகுப்பு தொடர்பாக கனடாவை தொடர்புகொண்ட இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலிஸ்தான் ஆதரவு அணிவகுப்பு தொடர்பாக கனடாவை தொடர்புகொண்ட இந்தியா
    தீவிரவாதிகளுக்கு இடம் கொடுத்ததற்காக கனடாவை இந்தியா மீண்டும் சாடியுள்ளது

    காலிஸ்தான் ஆதரவு அணிவகுப்பு தொடர்பாக கனடாவை தொடர்புகொண்ட இந்தியா

    எழுதியவர் Venkatalakshmi V
    May 08, 2024
    08:42 am

    செய்தி முன்னோட்டம்

    கனடா டொராண்டோவிலுள்ள மால்டனில் நடந்த நகர் கீர்த்தன் அணிவகுப்பில் காலிஸ்தான் சார்பு படங்கள் காட்சிப்படுத்தப்பட்டதையடுத்து, தீவிரவாதிகளுக்கு இடம் கொடுத்ததற்காக கனடாவை இந்தியா மீண்டும் சாடியுள்ளது.

    இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"எங்கள் அரசியல் தலைமைக்கு எதிராக கனடாவில் உள்ள தீவிரவாதிகள் வன்முறைப் படங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி நாங்கள் பலமுறை கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளோம். நமது முன்னாள் பிரதமரின் பேரணியில் இந்திய தூதரக அதிகாரிகளின் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக வன்முறை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது".

    "வன்முறையைக் கொண்டாடுவதும் மகிமைப்படுத்துவதும் எந்தவொரு நாகரீக சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது. சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் ஜனநாயக நாடுகள் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை அனுமதிக்கக்கூடாது," என்று அவர் மேலும் கூறினார்.

    காலிஸ்தான்

    கனடாவில் நடந்த காலிஸ்தான் பேரணி

    நாகர் கீர்த்தனை அணிவகுப்பு ஒண்டாரியோ குருத்வாரா கமிட்டியால் ஏற்பாடு செய்யப்பட்டது.

    அங்கு வைக்கப்பட்ட மிதவைகள் மற்றும் பேச்சுக்கள், இந்திய அரசியல் பிரமுகர்களை ஆக்ரோஷமாக குறிவைத்தும், சிறை கம்பிகளுக்குப் பின்னால் பிரதமர் நரேந்திர மோடி இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.

    "கனடாவில் உள்ள எங்கள் இராஜதந்திர பிரதிநிதிகளின் பாதுகாப்பு குறித்து நாங்கள் தொடர்ந்து அக்கறை கொண்டுள்ளோம். மேலும் அவர்கள் தங்கள் பொறுப்புகளை அச்சமின்றி நிறைவேற்றுவதை கனடா அரசாங்கம் உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று ஜெய்ஸ்வால் கூறினார்.

    "குற்றவியல் மற்றும் பிரிவினைவாத கூறுகளுக்கு கனடாவில் பாதுகாப்பான புகலிடத்தையும் அரசியல் இடத்தையும் வழங்குவதை நிறுத்துமாறு கனடா அரசாங்கத்தை நாங்கள் மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கனடா
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    ஸ்காட்லாந்து குருத்வாராவிற்குள் இந்திய தூதரை நுழைய விடாமல் தடுத்த தீவிர சீக்கியர்கள் இங்கிலாந்து
    இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர் கைது இந்தியா
    கனடா-இந்தியா இடையே பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தல் கனடா

    கனடா

    பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்கா
    காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன? அமெரிக்கா
    டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர் அமெரிக்கா

    இந்தியா

    CAA விதிகள் இந்திய அரசியலமைப்பை மீறும்: அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை  குடியுரிமை (திருத்த) சட்டம்
    இந்தியாவில் முதன்முறையாக இலகுவான புல்லட்-ப்ரூஃப் ஜாக்கெட்டை உருவாகியுள்ளது DRDO  பாதுகாப்பு துறை
    சொத்துப் பங்கீடு தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ்
    'மணிப்பூர் வன்முறை குறித்த அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை தவறானது': இந்தியா கண்டனம்  மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025