
இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 18) 21 மாவட்டங்களிலும், நாளை (செப்டம்பர் 19) 5 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியே இந்த மழைக்குக் காரணம் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று (செப்டம்பர் 18) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் நாகப்பட்டினம் ஆகியவை ஆகும்.
கனமழை
கனமழை எச்சரிக்கை
IMD அறிக்கைபடி, நாளை (செப்டம்பர் 19) தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து, செப்டம்பர் 20ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களாக நீலகிரி மற்றும் ஈரோடு கணிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.