NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை சரியாக வழங்கியது' - நிர்மலா சீதாராமன் காட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை சரியாக வழங்கியது' - நிர்மலா சீதாராமன் காட்டம் 
    'வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சரியாக வழங்கியது' - நிர்மலா சீதாராமன் காட்டம்

    'வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை சரியாக வழங்கியது' - நிர்மலா சீதாராமன் காட்டம் 

    எழுதியவர் Nivetha P
    Dec 22, 2023
    05:09 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே வானிலை ஆய்வு மையம் சரியான நேரத்தில், முறையான எச்சரிக்கை கொடுக்காததே இந்த பாதிப்புகளுக்கு காரணம் என்று தமிழக அரசு குற்றச்சாட்டியுள்ளது.

    ரெட் அலெர்ட் அறிவிப்புக்கும், வெள்ளப்பெருக்கு ஏற்பட துவங்கிய நேரத்திற்கும் இடையேயான நேர இடைவெளி மிக குறைவு என்று பால்வளத்துறை அமைச்சர் கூறியிருந்தார்.

    தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவும் வானிலை அறிக்கை சரியாக இல்லை என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.

    அரசு 

    வானிலை ஆய்வு மையம் அதிநவீனமானது-நிர்மலா சீதாராமன் 

    இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட நிவாரண பணிகள் குறித்து பேசியுள்ளார்.

    அப்போது அவரிடம் மாநில அரசு, வானிலை ஆய்வு மையம் குறித்து வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர், 'வானிலை ஆய்வு மையம் அதிநவீனமானது. உரிய முன்னெச்சரிக்கையை வழங்கியுள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கடந்த 12ம் தேதி முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது' என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.

    அறிக்கை 

    ரெட் அலெர்ட் கொடுத்த பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

    தொடர்ந்து, மழை துவங்கிய பிறகும் ஒவ்வொரு 3 மணிநேரத்துக்கும் இடையே தொடர்ந்து அப்டேட் கொடுக்கப்பட்டது என்றும்,

    இன்ச் பை இன்ச் மழையின் அளவை கணக்கிட முடியாது.

    ரெட் அலெர்ட் கொடுத்த பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்தது ஏன்? என்றும் சரமாரியாக பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    மேலும் பேசிய அவர், 'தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரேநாளில் பெய்துள்ளது.

    மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு உதவிகளை வழங்கி வருகிறது' என்றும், 'இந்திய விமானப்படையின் 9 ஹெலிகாப்டர்கள் மூலம் 70 நடைகள் சென்று ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியிருந்த 800 பயணிகளை மீட்டெடுத்துள்ளோம்' என்றும் தெரிவித்துள்ளார்.

    பாதிப்பு 

    பேரிடர் நிதி ஏற்கனவே தமிழகத்திற்கு வழங்கப்பட்டு விட்டது என தகவல் 

    பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் தாமதமாகவே சென்றதாகவும்,

    பேரிடர் மீட்பு குழு சம்பவ இடங்களுக்கு சென்று தங்கள் மீட்பு பணிகளை துவங்கிய பின்னரே அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அங்கு வந்தனர் என்றும் கூறினார்.

    அதே போல் தமிழகத்திற்கு இந்தாண்டு வழங்கவேண்டிய பேரிடர் நிதி ரூ.900 கோடி இரு தவணைகளாக ஏப்ரல் மாதமும், டிசம்பர் மாதம் 12ம் தேதியும் வழங்கப்பட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    பாமக 

    நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் 

    இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்கிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

    அப்போது அவர், "மழை எச்சரிக்கையினை சரியாக தெரிவிக்காவிடில் சென்னை வானிலை ஆய்வு மையம் எதற்கு? அதனை மூடி விடலாம்" என்றும்.

    "வானிலை மையம் செய்யும் பணியினை 5ம் வகுப்பு மாணவன் கூட செய்வான்" என்றும் ஆவேசமாக பேசியுள்ளார்.

    தொடர்ந்து அவர், "இனி அடிக்கடி இயற்கை சீற்றங்கள் ஏற்படக்கூடும். அதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    நிர்மலா சீதாராமன்

    Watch | "சென்னை வானிலை மையம் அதிநவீனமானது. உரிய வானிலை முன்னெச்சரிக்கையை வழங்கியுள்ளது"#SunNews | #TNRains | #NirlamalaSitharaman | #ChennaiFloods pic.twitter.com/D3TgTI4ffy

    — Sun News (@sunnewstamil) December 22, 2023

    ட்விட்டர் அஞ்சல்

    அன்புமணி ராமதாஸ் 

    #Watch | "சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம்" -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டம்#SunNews | #AnbumaniRamadoss | #WeatherForecast | #ChennaiMeteorologicalDepartment | @draramadoss pic.twitter.com/bgqMf57Nhe

    — Sun News (@sunnewstamil) December 22, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிர்மலா சீதாராமன்
    நிர்மலா சீதாராமன்
    நிதியமைச்சர்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நிர்மலா சீதாராமன்

    மக்களவையில் சாதி, மதத்தை பற்றி பேசக்கூடாது: சபாநாயகர் எச்சரிக்கை! இந்தியா
    10 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி: நிதி அமைச்சர் அறிவிப்பு இந்தியா
    மருத்துவ படிப்புகள் தமிழில் இருக்க வேண்டும்-நிர்மலா சீதாராமன் பேச்சு நிர்மலா சீதாராமன்
    மத்திய பட்ஜெட் 2023: ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமன்

    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் பட்ஜெட் 2023
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் பட்ஜெட் 2023
    யூனியன் பட்ஜெட் 2023; ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை பட்ஜெட் 2023
    2023 பட்ஜெட் - உணவு தானியங்கள் இலவசமாக அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு பட்ஜெட் 2023

    நிதியமைச்சர்

    கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தில் 4000 ஊழியர்கள் பணி நீக்கம் - காரணம்? உலக செய்திகள்
    யூனியன் பட்ஜெட் 2023: பட்ஜெட் உரையில் கூறப்பட்ட சிக்கில் செல் அனீமியா என்றால் என்ன? பட்ஜெட் 2023
    மத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள் மத்திய அரசு
    பட்ஜெட் 2023-24: நிதியமைச்சரின் சீரியஸான பட்ஜெட் உரையின் ஊடே நடைபெற்ற, சில சுவாரஸ்ய தருணங்கள் பட்ஜெட் 2023

    தமிழ்நாடு

    மிக்ஜாம் புயல்: அடுத்த 5 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    ஆந்திராவில் கரையை கடக்க இருக்கிறது மிஜாம் புயல்  ஆந்திரா
    இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை: இன்று என்னென்ன சேவைகள் இயங்கும்? சென்னை
    சென்னை எம்எல்ஏக்கள் வெளியில் வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்- விஷால் வலியுறுத்தல் விஷால்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025