NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கால்களில் சங்கிலி, கைகளில் விலங்குகள் பூட்டப்பட்டு இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    கால்களில் சங்கிலி, கைகளில் விலங்குகள் பூட்டப்பட்டு இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள்
    நாடுகடத்தப்பட்டவர்களை ஏற்றி வந்த விமானம் புதன்கிழமை அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது

    கால்களில் சங்கிலி, கைகளில் விலங்குகள் பூட்டப்பட்டு இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 06, 2025
    09:52 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை டிரம்ப் நாடு கடத்தி வருகிறார்.

    அந்த வகையில் நேற்று அமெரிக்கா ராணுவ விமானம் மூலம் 104 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள், பயணம் முழுவதும் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இராணுவ விமானத்தில் பயணித்ததாக கூறினர்.

    சட்டவிரோத குடியேறிகள் மீதான டொனால்ட் டிரம்பின் கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியில், 19 பெண்கள் மற்றும் 13 சிறார்கள் உட்பட 104 நாடுகடத்தப்பட்டவர்களை ஏற்றி வந்த அமெரிக்க இராணுவ விமானம் புதன்கிழமை அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

    நாடுகடத்தப்பட்டவர்களில் ஒருவரான பஞ்சாபின் குருதாஸ்பூரைச் சேர்ந்த 36 வயது ஜஸ்பால் சிங், அமிர்தசரஸில் தரையிறங்கிய பின்னரே அவர்கள் விலங்குகளை நீக்கியதாக கூறினார்.

    தகவல்

    நாடு கடத்தப்பட்டவர்கள் கூறுவது என்ன?

    "நாங்கள் வேறொரு முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக நினைத்தோம். பின்னர் ஒரு போலீஸ் அதிகாரி எங்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதாக எங்களிடம் கூறினார்".

    "எங்கள் கைகள் விலங்கிடப்பட்டன, எங்கள் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டன. இவை அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தான் திறக்கப்பட்டன," என்று அவர் செய்தி நிறுவனமான PTI இடம் கூறினார்.

    அவர் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்பு அமெரிக்காவில் 11 நாட்கள் காவலில் வைக்கப்பட்டதாக சிங் மேலும் கூறினார்.

    இருப்பினும், புதன்கிழமை முன்னதாக, இந்திய குடியேறிகள் கைவிலங்கு போடப்பட்டு, அவர்களின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை இந்திய அரசாங்கம் நிராகரித்ததுள்ளது.

    இணையத்தில் பரப்பப்படும் வைரல் படம் உண்மையில் இந்தியர்கள் அல்ல, குவாத்தமாலா நாட்டினரை சித்தரிக்கிறது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியது.

    ஏமாற்றம்

    பயண முகவர்களால் ஏமாற்றப்பட்டு அமெரிக்கா அனுப்பப்பட்டதாக கூறிய நாடு கடத்தப்பட்டவர்கள்

    சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்கு அனுப்புவதாக உறுதியளித்த ஒரு பயண முகவரால் தான் ஏமாற்றப்பட்டதாக வந்தவர்களில் ஒருவர் கூறியதாக இந்திய டுடே தெரிவித்தது.

    "சரியான விசாவுடன் என்னை அனுப்புமாறு முகவரிடம் கேட்டிருந்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார், இந்த ஒப்பந்தம் ரூ.30 லட்சத்திற்கு செய்யப்பட்டது. பணம் கடன் வாங்கப்பட்டது." என்று கூறினார்.

    பஞ்சாபிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஹர்விந்தர் சிங், மெக்சிகோவை அடைவதற்கு முன்பு கத்தார், பிரேசில், பெரு, கொலம்பியா, பனாமா மற்றும் நிகரகுவா வழியாக அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறினார்.

    மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் போது, ​​"நாங்கள் மலைகளைக் கடந்தோம். மற்றவர்களுடன் என்னையும் ஏற்றிச் சென்ற ஒரு படகு கடலில் கவிழ்ந்துவிடும் நிலையில் இருந்தது, ஆனால் நாங்கள் உயிர் பிழைத்தோம்," என்று கூறினார்.

    விவரங்கள்

    நாடுகடத்தப்பட்டவர்களுடன் நேற்று அம்ரிதசரஸ் வந்தடைந்த ராணுவ விமானம் 

    முதல் கட்டமாக இந்திய அனுப்பப்பட்ட சட்டவிரோத குடியேறிகளில் 33 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், 33 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 30 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தலா மூன்று பேர், சண்டிகரைச் சேர்ந்தவர்கள் இருவர்.

    நாடு கடத்தப்பட்டவர்களில் 19 பெண்கள் மற்றும் 13 சிறுவர்கள் அடங்குவர்.

    இதில் நான்கு வயது சிறுவன் ஒருவன், ஐந்து மற்றும் ஏழு வயதுடைய இரண்டு சிறுமிகள் அடங்குவர்.

    இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டிய 18,000 ஆவணமற்ற இந்தியர்களின் பட்டியலை அமெரிக்க அதிகாரிகள் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியர்கள்
    அமெரிக்கா
    டொனால்ட் டிரம்ப்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியர்கள்

    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் இந்தியா
    இந்திய மாணவர்களுக்கு 1.4 லட்சம் விசாக்களை வழங்கி அமெரிக்க தூதரகம் சாதனை அமெரிக்கா
    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன? அமெரிக்கா
    ஐக்கிய ராஜ்யத்தின் சர்வதேச மாணவர்களின் சார்பு கொள்கையில் மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துமா? இங்கிலாந்து

    அமெரிக்கா

    அதிபராக பதவியேற்கும் முன் முகேஷ் மற்றும் நீதா அம்பானியை சந்தித்த டொனால்ட் டிரம்ப் டொனால்ட் டிரம்ப்
    அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கிறார்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை டொனால்ட் டிரம்ப்
    அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பில் ஜனவரி 20 -இன் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ளுங்கள்! டொனால்ட் டிரம்ப்
    அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்றுக்கொண்டார் டொனால்ட் டிரம்ப்

    டொனால்ட் டிரம்ப்

    'துளியளவும் வாய்ப்பு இல்லை...': டிரம்பின் கனடா இணைப்பு யோசனையை நிராகரித்த ட்ரூடோ  ஜஸ்டின் ட்ரூடோ
    டிரம்பின் கேபிடல் வருகைக்கு முன்னதாக, கூர்மையான ஆயுதங்களுடன் பிடிபட்ட மர்ம நபர் அமெரிக்கா
    'நான் போட்டியிட்டிருந்தால் டிரம்பை வீழ்த்தியிருப்பேன்': கமலா ஹாரிஸ் தோல்வி குறித்து ஜோ பைடன் கருத்து ஜோ பைடன்
    டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு எஸ்.ஜெய்சங்கர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025