பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் உயர்க்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் போன்றவற்றிற்கு கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசால் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவானது, மூன்று வகையான உயர்கல்வி படிப்புகளுக்கு புதிய கட்டணங்களை நிர்ணயம் செய்ய இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை நடத்தும் கல்லூரிகளிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றிருக்கிறது.
அந்த விண்ணப்பங்கள் படி, தனியார் பொறியியல் கல்லூரிகள் 25% வரை கட்டண உயர்வு கேட்டுள்ளது.
அதன்படி, நடப்பு கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிப்புகள், துணை மருத்துவ படிப்புகள் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது சார்ந்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கட்டணம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
embed
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன
#BREAKING || பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன தனியார் கல்லூரி நிர்வாகங்கள் 25% வரை கட்டண உயர்வு கேட்டு கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பம் மாற்றப்படும் புதிய கட்டண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் "அமலுக்கு வரும் புதிய கட்டண விகிதம் அடுத்த 3 கல்வி... pic.twitter.com/Uu91BujpCR— Thanthi TV (@ThanthiTV) April 8, 2024