NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரயாக்ராஜில் உள்ள கங்கையில் அதிக அளவு மல பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரயாக்ராஜில் உள்ள கங்கையில் அதிக அளவு மல பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிப்பு
    கங்கையில் அதிக அளவு மல பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிப்பு

    பிரயாக்ராஜில் உள்ள கங்கையில் அதிக அளவு மல பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 18, 2025
    11:29 am

    செய்தி முன்னோட்டம்

    மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) சமர்ப்பித்த அறிக்கையைத் தொடர்ந்து, பிரயாக்ராஜில் உள்ள கங்கையில் அதிக அளவு மல பாக்டீரியாக்கள் இருப்பது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) கவலை தெரிவித்துள்ளது.

    பிப்ரவரி 3 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை, மகா கும்பமேளாவின் போது கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை சுட்டிக்காட்டுகிறது.

    CPCB அறிக்கையின் படி, கங்கையில் இரு நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது- ஜனவரி 12-13 தேதிகளில். ஆய்வின் இறுதியில் குளியலுக்கு ஏற்ற தரத்துடன் நதி நீரின் தரம் ஒத்துப்போகவில்லை.

    பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்காணிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும், ஃபெக்கல் கோலிஃபார்ம் (FC) அதிகரித்து, குளிப்பதற்கான முதன்மை நீரின் தரத்துடன் நதி நீரின் தரம் ஒத்துப்போகவில்லை.

    அசுத்தம்

    நதி நீரின் தரம் குறைந்ததற்கு கும்ப மேளாவும் ஒரு காரணம் என்கிறது அறிக்கை 

    மகா கும்பமேளாவின் போது, ​​குறிப்பாக புனித நாட்களில், ஏராளமான மக்கள் கங்கையில் குளிப்பதால், அசுத்தம் அதிகரித்ததாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

    இந்தப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STP-கள்) பொதுவாக செயல்பட்டு வந்தாலும், ஷாஹி ஸ்னான்ஸ் மற்றும் திருவிழாவின் பிற முக்கிய சடங்குகளின் போது மாசுபாடு அளவு அதிகரித்ததாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    வழக்கு

    நதி நீர் மாசு குறித்து வழக்கு தொடரப்பட்டதன் காரணமாக நடத்தப்பட்ட ஆய்வு 

    கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான தீர்ப்பாயம், கண்டுபிடிப்புகளை மதிப்பாய்வு செய்து, உத்தரபிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (UPPCB) அதிகாரிகளை புதன்கிழமை மெய்நிகர் முறையில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

    இந்த மெய்நிகர் சந்திப்பின் போது அதிகரித்து வரும் மாசு அளவுகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்க வேண்டும்.

    கங்கை மற்றும் யமுனை நதிகளில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுவது குறித்த கவலைகளைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் பிரயாக்ராஜில் நீரின் தரம், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றைக் கடுமையாகக் கண்காணிக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகா கும்பமேளா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மகா கும்பமேளா

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா இன்று உ.பி.,யில் துவக்கம்; 45 கோடி மக்கள் பங்கேற்கக்கூடும் உத்தரப்பிரதேசம்
    மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி; கமலா என்ற இந்து பெயரை ஏற்றார் வாரணாசி
    மஹா கும்பமேளா ஏன் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது தெரியுமா? உத்தரப்பிரதேசம்
    விண்வெளி பொறியியல் டு சந்நியாசம்: 2025 மகா கும்பமேளாவில் கவனத்தை ஈர்க்கும் ஐஐடி பாபா ஐஐடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025