Page Loader
அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்
தெலுங்கானா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது

அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 13, 2024
06:24 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் காட்சியில் ஏற்பட்ட நெரிசல் சிக்கி ஒரு நபர் உயிரிழந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தெலுங்கானா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. அல்லு அர்ஜுன் ஒரு நடிகராக இருந்தாலும், குடிமகனாக வாழவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அப்போது கருத்து தெரிவித்தது. இன்று மதியம் அல்லு அர்ஜுனை அவரது இல்லத்தில் இருந்து கைது செய்ததில் இருந்து பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், இந்த ஜாமீன் மனு உத்தரவு அல்லு அர்ஜுனுக்கும், அவரது ரசிகர்களுக்கும் ஆறுதலை தந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

கருத்து

ஜாமீன் வழங்கியபோது நீதிபதி கூறியது என்ன 

அல்லு அர்ஜுனின் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜுவ்வாடி ஸ்ரீதேவி, நடிகர் தனது திரைப்படத்தின் முதல் காட்சிக்காக தியேட்டருக்குச் சென்றதால் மட்டுமே, இந்த சம்பவத்திற்கு அவர் பொறுப்பேற்க முடியாது என்று கூறினார். "நடிகன் என்று சொல்லி, அவனது உரிமையை பறிக்க முடியாது. இந்த பூமியின் குடிமகனாக, அவனுக்கும் வாழ்வதற்கும் சுதந்திரத்திற்கும் உரிமை உண்டு" என்று கூறிய நீதிமன்றம், இறந்தவரின் குடும்பத்தினருக்கு அனுதாபம் காட்டுவதாக வலியுறுத்தியது.