NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை தண்டனை: உயர் நீதிமன்ற உதவியை நாடியுள்ள குடும்பத்தினர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை தண்டனை: உயர் நீதிமன்ற உதவியை நாடியுள்ள குடும்பத்தினர்
    உயர் நீதிமன்ற உதவியை நாடியுள்ள அல்லு அர்ஜுன் குடும்பத்தினர்

    அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை தண்டனை: உயர் நீதிமன்ற உதவியை நாடியுள்ள குடும்பத்தினர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 13, 2024
    05:05 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் இன்று கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நம்பள்ளியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

    விசாரணை முடிந்ததும் அவரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    உடனடியாக உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் அல்லு அர்ஜுனின் குடும்பத்தினர்.

    அவசர வழக்காக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது எனவும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வரும்வரை நீதிமன்ற காவல் உத்தரவு ஒத்தி வைக்கப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    'புஷ்பா 2: தி ரைஸ்' இன் பிரீமியர் காட்சியில் கூட்ட நெரிசல் சிக்கி 39 வயது பெண் உயிரிழந்ததும் மற்றும் அவரது மைனர் மகன் படுகாயம் அடைந்ததும் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | தெலங்கானாவில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது!#SunNews | #AlluArjunArrest | #Telangana pic.twitter.com/sORcOjcfA0

    — Sun News (@sunnewstamil) December 13, 2024

    வழக்கு

    நடிகர் அல்லு அர்ஜுனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தயார்

    கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதியின் கணவர் தற்போது வழக்கை வாபஸ் பெற தயாராகிவிட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரேவதியின் கணவர் பாஸ்கர், "என் மகன் படம் பார்க்க ஆசைப்பட்டதால் சந்தியா தியேட்டருக்கு அழைத்துச் சென்றேன். அங்கு அல்லு அர்ஜுன் வந்தார். அதில் அவரது தவறில்லை. வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறோம். நான் மருத்துவமனையில் இருந்தபோது அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட செய்தியை நான் பார்த்தேன். அந்த சம்பவத்திற்கும் அவர் திரையரங்கிற்கு வருவதற்கும் சம்மந்தம் இல்லை. நான் வழக்கை வாபஸ் வாங்க தயாராக இருக்கிறேன்" என்றார்.

    கண்டனங்கள் 

    வலுக்கும் கண்டனங்கள்

    அல்லு அர்ஜுன் கைதிற்கு எதிராக ஆந்திர திரையுலகம் மற்றும் அவரது ரசிகர்கள் கண்டங்களை எழுப்பி வருகின்றனர்.

    அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது, அவரது இல்லத்திற்கு விரைந்தார் நடிகர் சிரஞ்சீவி.

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த வழக்கில் அரசின் தலையீடு இருக்காது எனவும், சட்டம் தனது கடமையை செய்யும் எனவும் கூறினார்.

    அதே வேளையில் ஆந்திராவின் துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் தனியார் விமானம் மூலம் அல்லு அர்ஜுன் இல்லத்திற்கு விரைந்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அல்லு அர்ஜுன்
    சிறை
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அல்லு அர்ஜுன்

    'புஷ்பா 2: தி ரூல்' டீஸர் தேதி பற்றி தகவல் வெளியானது தெலுங்கு திரையுலகம்
    'புஷ்பா 2' புதிய போஸ்டர் வெளியீடு; நாளை காலை டீஸர் வெளியாகும் என அறிவிப்பு படத்தின் டீசர்
    அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    புஷ்பா 2 படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது ரஷ்மிகா மந்தனா

    சிறை

    ஈரான்: மாஷா அமினியின் மரணம் குறித்து செய்தி சேகரித்த இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு சிறை ஈரான்
    சிறை நூலகங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    கோவையில் போக்சோ சிறை கைதி தப்பி ஓட்டம் கோவை
    நவம்பர் 1ம் தேதி - எல்லை போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு மு.க ஸ்டாலின்

    உயர்நீதிமன்றம்

    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை: வரும் 28ம் தேதி சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு  தொல்லியல் துறை
    மதுரை அமெரிக்கன் கல்லூரி வழக்கினை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை மதுரை
    தொடரும் ரசிகர்கள் காத்திருப்பு: துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்று வெளியாகாது என ஜிவிஎம் தகவல் கௌதம் வாசுதேவ் மேனன்
    'வெள்ளம் வந்தாலும் மும்பை நீதிமன்றங்கள் செயல்படும்': சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சை கருத்து சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025