NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒன்பது மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை: 45 °Cஐ நெருங்குகிறது வெப்பநிலை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒன்பது மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை: 45 °Cஐ நெருங்குகிறது வெப்பநிலை 
    சிக்கிம், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெப்ப அலைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒன்பது மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை: 45 °Cஐ நெருங்குகிறது வெப்பநிலை 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 18, 2023
    11:27 am

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இந்த மாநிலங்கள் மிக அதிக வெப்பநிலையை பதிவு செய்ய வாய்ப்பிருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சிக்கிம், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெப்ப அலைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருக்கிறது. அதனால், இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை கொஞ்சம் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அதன் முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.

    DETAILS

    வெப்ப அலையால் மகாராஷ்டிராவில் 13 பேர் உயிரிழப்பு 

    பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நேற்று வெப்ப அலைகளை ஒத்த வெப்பநிலை இருந்தது. இன்றும் அதே போன்ற வெப்பநிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வெப்ப அலைகளுக்கான ஆரஞ்சு எச்சரிக்கை என்பது அதிக வெப்பநிலையைக் குறிக்கிறது. நீண்ட நேரம் வெயிலில் அதிக வேலை செய்யும் நபர்களுக்கு வெப்ப நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதை இந்த எச்சரிக்கை கூறுகிறது.

    ஒரு நாளுக்கு முன், மகாராஷ்டிரா அரசாங்க நிகழ்வில் பல மணிநேரம் திறந்த வெளியில் அமர்ந்திருந்த 13 பேர் உயிரிழந்தனர். இவர்கள் வெப்ப நோய்களால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை

    சமீபத்திய

    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா
    குஜராத்தில் BSF, IAF தகவல்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததாக ஒருவர் கைது  குஜராத்
    ஐபிஎல் 2025: GTக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி பெறுமா?  குஜராத் டைட்டன்ஸ்

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 11,109 கொரோனா பாதிப்பு: 29 பேர் உயிரிழப்பு கொரோனா
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!  வந்தே பாரத்
    ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!  தொழில்நுட்பம்
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  சைபர் கிரைம்

    வானிலை அறிக்கை

    வானிலை அறிக்கை: மார்ச் 3- மார்ச் 7 தமிழ்நாடு
    வானிலை அறிக்கை: மார்ச் 4- மார்ச் 8 தமிழ்நாடு
    வானிலை அறிக்கை: மார்ச் 6- மார்ச் 10 தமிழ்நாடு
    வானிலை அறிக்கை: மார்ச் 7- மார்ச் 11 தமிழ்நாடு

    வானிலை எச்சரிக்கை

    தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - கனமழைக்கு வாய்ப்பு! வானிலை அறிக்கை
    -4°C வெப்பநிலை: வட இந்தியாவில் வரலாறு காணாத குளிர் வரப்போகிறது இந்தியா
    தமிழகத்தில் மழை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இலங்கை
    இந்த வருடம் வறட்சி ஏற்படுவதற்கு வாய்ப்ப: நிபுணர்கள் எச்சரிக்கை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025