NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகாராஷ்டிரா பூஷன் விருது விழா: அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகாராஷ்டிரா பூஷன் விருது விழா: அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு
    ஷிண்டே மற்றும் ஃபட்னாவிஸ் ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.

    மகாராஷ்டிரா பூஷன் விருது விழா: அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 17, 2023
    09:37 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஏப் 16) மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்கும் நிகழ்வில் திறந்த வெளியில் அமர்ந்திருந்த 11 பேர் வெப்ப வாதத்தால் உயிரிழந்ததாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

    சுமார் 50 பேர், அதிக வெப்பத்தால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று மருத்துவமனையில் சந்தித்தார்.

    மகாராஷ்டிரா அரசால் வழங்கப்படும் விருதை, சமூக ஆர்வலர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கினார்.

    இந்த நிகழ்வு நவி மும்பையில் நடைபெற்றது. நவி மும்பையில் நேற்றைய தினம் பகல் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யப்பட்டது.

    ஷிண்டே மற்றும் ஃபட்னாவிஸ் ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.

    details

    இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

    நவி மும்பையில் உள்ள பிரமாண்ட மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர்களின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.

    காலை 11.30 மணிக்கு தொடங்கிய விருது வழங்கும் விழா மதியம் 1 மணி வரை நடந்தது.

    மைதானத்தில் பார்வையாளர்களுக்கான இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், அதற்கு மேல் கொட்டகை எதுவும் போடப்படவில்லை.

    முதலமைச்சர் ஷிண்டே இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு அரசாங்கம் பணம் செலுத்தும் என்று ஃபட்னாவிஸ் ட்வீட் செய்திருந்தார்.

    அடுத்த ஐந்து நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மகாராஷ்டிரா

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    இந்தியா

    கோடைவிடுமுறைக்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய, இந்தியாவின் அழகிய 'நீல' கடற்கரைகள்  கடற்கரை
    மின்சாதன ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா ஸ்மார்ட்போன்
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1 பஞ்சாப்
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 பஞ்சாப்

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி இந்தியா
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025