NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹரியானாவில் அக்டோபர் 15ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு; மீண்டும் முதல்வராகிறார் நயாப் சிங் சைனி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹரியானாவில் அக்டோபர் 15ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு; மீண்டும் முதல்வராகிறார் நயாப் சிங் சைனி?
    ஹரியானாவில் அக்டோபர் 15ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு

    ஹரியானாவில் அக்டோபர் 15ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு; மீண்டும் முதல்வராகிறார் நயாப் சிங் சைனி?

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 11, 2024
    05:11 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூன்றாவது தொடர்ச்சியான அரசாங்கம் அக்டோபர் 15ஆம் தேதி பதவியேற்கும் என்று பஞ்ச்குலாவின் துணை ஆணையர் டாக்டர் யாஷ் கார்க் தெரிவித்தார்.

    விழா பஞ்ச்குலாவில் உள்ள தௌ தேவி லால் ஸ்டேடியம் அல்லது பரேட் கிரவுண்ட் செக்டார்-5ல் நடைபெறும்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர பாஜக தலைவர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்ய யாஷ் கார்க் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, மார்ச் மாதம் மனோகர் லால் கட்டாருக்குப் பதிலாக முதலமைச்சராகப் பதவியேற்ற நயாப் சிங் சைனி, கட்சி வெற்றி பெற்றால் மீண்டும் முதல்வராக இருப்பார் என ஏற்கனவே பாஜக அறிவித்திருந்தது.

    நயாப் சிங் சைனி

    மீண்டும் நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்பு

    இந்நிலையில், அவர் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கட்சித் தலைமை புதிய மாநில அமைச்சரவை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    ஹரியானாவில் உள்ள சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், முதல்வர் உட்பட மொத்தம் 14 அமைச்சர்கள் மட்டுமே இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, 2019ல் ஹரியானா சட்டசபை தேர்தலில், 40 இடங்களை பெற்றிருந்த பாஜக, இந்தமுறை 48 இடங்களுடன் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

    கடந்த தேர்தலில் 31 இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி 37 இடங்களை கைப்பற்றியது. இந்திய தேசிய லோக்தளம் மற்றும் மூன்று சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

    இந்த சுயேச்சைகள் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹரியானா
    பாஜக
    இந்தியா
    அரசியல் நிகழ்வு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஹரியானா

    சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் பேருந்துகள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள்  டெல்லி
    50க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் கைது: ஹரியானாவில் பரபரப்பு  பாலியல் வன்கொடுமை
    'அரசியல் பழிவாங்கலுக்கு இது நேரமில்லை': டெல்லி காற்று மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து  உச்ச நீதிமன்றம்

    பாஜக

    இன்று NDA கூட்டத்திற்கு பிறகு, மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் எனத்தகவல்  மோடி
    ஆட்சி அமைக்க உரிமை கோரியது பாஜக கூட்டணி: மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி  இந்தியா
    பாஜக வெற்றி பெற்றதற்கு தனது விரலை துண்டித்து நேர்த்திக்கடன் செலுத்திய நபர்  பொதுத் தேர்தல் 2024
    பிரதமர் பதவியேற்றவுடன் மத்திய அமைச்சரவையின் 30 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர் இந்தியா

    இந்தியா

    சென்னை ஏர்ஷோ 2024: உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என சாதனை விமானப்படை
    35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்; ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு ஆசிய கோப்பை
    சமையல் எரிவாயுவில் பசுமை ஹைட்ரஜன்; கார்பன் உமிழ்வைக் குறைக்க அதானி நிறுவனம் அதிரடி திட்டம் அதானி
    2024-25 இரண்டாம் காலாண்டில் இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனை 15% அதிகரிக்கும் என கணிப்பு இரு சக்கர வாகனம்

    அரசியல் நிகழ்வு

    அஜித் பவாருக்கு எதிராக தகுதி நீக்க மனுவை தாக்கல் செய்தது NCP மகாராஷ்டிரா
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  எதிர்க்கட்சிகள்
    சரத் பவாரை விட அஜித் பவாருக்கு அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு  மகாராஷ்டிரா
    தேர்தலின் போது தூர்தர்ஷனில் விளம்பரம் செய்ய டிஜிட்டல் வவுச்சர்கள் அறிமுகம் தேர்தல் ஆணையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025